புத்தகமும் புதிரும்
நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக, படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை எத்தனை முறை மீண்டும் மீண்டும் படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை மீண்டும் பிரட்டிப்பார்ப்பதால் மனதை வருடும் அழகான நினைவுகளும், வதைக்கும் வலிகளும் உயிரை உரசிவிட்டுச் செல்லும் - என் மனதை தொட்ட கதை என்பதற்காக, அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவரவர் இரசணைக்கு தகுந்தாற்போல விருப்பு வெறுப்புக்கள் வேறுபடும் - இதுதான் இருப்பதிலேயே சிறந்த புத்தகம் என்ற வாதம் ஏற்பில்லாதது. அந்த புத்தகத்தை விட பிரம்மிக்க தக்க புத்தகங்கள் எத்தனையோ இருக்கலாம் - எல்லாம், எல்லார் மனதையும் தொடவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. காலத்தின் போக்கில் எத்தனையோ புதிர்கள் கலந்த புத்தகங்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கும். சிலருக்கு சிறந்த புத்தகங்கள் கிடைத்தும் இருக்கலாம், பலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம் - ஈற்றில் கிடைத்த புத்தகங்களை வாசிக்க வாழ்க்கை கற்றுக்கொடுத்திருக்கும்! Samyu❣️