Posts

Showing posts from July, 2009

48. வாழ்க்கை என்றால் என்ன?

தொலைபேசி சிணுங்கியது மறுமுனையில் நண்பன் “வாழ்க்கை என்றால் என்ன? எதில் ஆரம்பித்து, எங்கே முடிகிறது? சௌந்தர்யமானதா? வறுமையானதா? இன்பனானதா? துன்பமானதா? அதில் என்னென்ன இருக்கும்? மீண்டும் அழைக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையோடு தொடர்பைத் துண்டித்தேன் நண்பன் எனக்குள் எழுப்பிய பல்வேறான வினாக்களைத் தொகுப்புக்களாக ஏந்தி பயணிக்கத் தொடங்கினேன் எனக்குள்ளான எல்லா வினாக்களுக்கும் விடைத்தேடியே திரும்ப வேண்டுமென்ற ஒரு திடமான எண்ணத்தோடு தெருவோரமாக நடக்கத் தொடங்கினேன்! அங்கே....! குழந்தைகள் தன்னை மறந்து குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களின் சிரித்த முகம் வாழ்க்கை இன்பம்! சிறிது தூரம் நடக்கின்றேன்.......! தன் பலம் அனைத்தையும் ஒன்றாய் திரட்டி ஆசை மனைவியைத் தாக்கிக் கொண்டிருக்கின்றான் ஒரு வீரன் அவளின் அழுகுரல், கண்ணீர் வாழ்க்கை துன்பம்! மீண்டும் நடக்கின்றேன்....! ஒரு வீட்டில் மகளின் பிறந்த நாள் விழாவாம் தெருமுனைவரை அலங்கரிக்கப்பட்டு ஆட்டமும் பாட்டமும் வருவோர் போவோருக்கெல்லாம் பரிசில்கள்

47. மெய்க்காதல் தீண்டா மெழுகுகள்!

வாழ்க்கை பரபரப்பில் அவசரமாய் ஓடும் கால நேரத்தில் செவ்வானம் மூடிய அஸ்தமனத்தின் பின் இருளின் தனிமையிலும் நீயும் நானும்; உனக்குள் நானாய்... எனக்குள் நீயாய்.... நமக்குள் நாமாய்.... பேசி முடித்த வார்த்தைகளின் உணர்வு கசிவுகள் சுவாசமாய் சுரம் மீட்டுகிறது! புரிந்துக் கொள்ளப்படாத நாட்களின் கணத்தை முட்டி மோதி வந்தமர்கின்றது – எனக்குப் பிடித்த உன் குரலினோசை! நான் மட்டுமே என்று குருக்கப்பட்ட என் வாழ்க்கைத் தோட்டத்தில் புது பொழிவுடன் என் மலராய் எனக்குள் பூத்த முதல் காதல் அரும்பு நீ! என் தோள் வாங்கித் தூங்கும் உன் மூடிய விழிகளில் விழிப்பதற்காய் தவமிருக்கின்றேன் என் விழிப்பே நீ என்பதால்! உன்னோடில்லை உன் நிழலைத் தொடத் தொடங்கிய தொடக்கமே உன் தொலைவான மனதிம் நெருக்கம் பெற்றேன்! தோல்வியாலல்ல தொடர்ந்து நெருக்கமான உறவுகளால் துப்பப்பட்ட உணர்ச்சிகளற்ற வார்த்தைகளால் தொடங்குகிறது உனக்காய் என் கவிதை! உன்னாலல்ல உன் நிழலால் கூட துரத்த முடியா என் காதலை ஒரு நொடியில் சபித்த இவர்கள் உண்மையில் உணர்ச்சிகளற்றவ

46. ????????????????

விழி நோக்கிக் கதை பேச விதியதுவும் எனக்குண்டோ? விரல் நீட்டி உனைத் தீண்ட விதியதுவும் எனக்குண்டோ? பருவங்கள் மாறி மாறி பல்லாயிர தருணங்கள் என்ற போதும் - என்னவனே உனைத் தாண்டி நீண்டதில்லை என் நினைவுகள்! மொழி பேசத் தயங்கிய முதல் தருணம் உன்னோடு; முழு மனதாய் சுமந்து கொண்டேன் கருவறைக்குள் கடவுள் போல! இறுகப் பூட்டிய இதயக்கதவு திறக்கவில்லை - என்னவனே உன் அணுவணுவான சுவாசமும் படித்தாண்டிடக் கூடாதென! உன் மீது காதல் உணர்வு ஒருபோதும் குறைந்ததில்லை குறையும் நிலை வந்திடிலோ குழியதற்குள் என்சுவாசம்! என்னவனே உன் உறவு எல்லையில்லா ஆனந்தம் - உன் உணர்வை பிரிந்திடுவேன் - உலகில் என் கடை நொடியில் அத்தருணம் எப்போதோ யானறியேன் என்னவனே அதுவரையில் உனை சுமப்பேன் என் உயிரின் உயிராக! உனைப் பிரியும் தருணமது என் வாழ்வின் கடை நொடியே; எனக்கான தவமதுவோ என்னவனே உனை நோக்க!

45. இடைவெளி

உன் பார்வை பார்த்துத் தானே - நான் காணும் காட்சிகள்...., உன் கேட்டல் திறனால் தானே - நான் கேட்கும் செய்திகள்....! உன் பேச்சை கொண்டு தானே - நான் பேசும் வார்த்தைகள்....! உன் இதயம் தாங்கித் தானே - நான் துடிக்கும் துடிப்புக்கள்....! உன் அங்கம் வாங்கித் தானே - நான் அசையும் அசைவுகள்....! எல்லாம் தெரிந்தும் - ஏனடா நீ இன்னும் தூரமாய்????

44. நட்பே

எட்ட எட்ட நின்று எனைத் தொட்டு விட்டுப் போன நட்பே - உனை எட்டி விடத் துடித்தேன் எட்ட நின்று....! கிட்டக் கிட்ட வந்து எனைத் தட்டி விட்டுப் போன நட்பே - உனைத் தட்டி விடத் தவித்தேன் தள்ளி நின்று....! தட்டத் தட்ட முட்டி எனைத் தள்ளி விட்டுப் போன நட்பே - உனைக் கட்டிபுட தவித்தேன் கிட்ட நின்று....! முட்ட முட்ட கிட்ட எனை முட்டி விட்டுப் போன நட்பே - உனைப் பற்றிக் கொள்ளப் பார்த்தேன் பக்கம் நின்று....! வெட்ட வெட்டப் பக்கம் எனைப் பார்த்து விட்டுப் போன நட்பே - உனை வென்றுக் கொள்ள அணைத்தேன் வெட்கி நின்று....! இப்படி எத்தனையோ நினைத்தேன் எனக்குள்ளே - எனை ஏசி விட்டுப் போறாய் உனக்குள்ளே; அத்தனையும் இன்று ஆறாமல் இருக்குது எந்தன் அகத்திலே!

43. எனக்குள்ளே எனக்குள்ளே ஏன் இந்த மாற்றங்கள்?

எனக்குள்ளே எனக்குள்ளே இந்த மாற்றங்கள் ஏனடா? உனக்குள்ளே உனக்குள்ளே வாழ்கின்றேன் நானடா! உந்தன் புரியாத பார்வைக்குள் புதைகிறது உள்ளமே! புதினங்கள் செய்து புதிர் போட்டு கொல்லுது! இரவான பகலுக்குள் பார்க்கின்றேன் உன் முகம்! நிஜமான நிழலுக்குள் சேர்கின்றேன் உன்னகம்! எனக்குள்ளே எனக்குள்ளே இந்த மாற்றங்கள் ஏனடா? உனக்குள்ளே உனக்குள்ளே வாழ்கின்றேன் நானடா! திவட்டாத நினைவுகள் எனக்குள்ளே தழும்புதே! நிமிடங்கள் தாண்டியும் நீளுதே காலமே! நினைத்திட நினைத்திட இனிக்குதே வாழ்க்கையே! நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் ஒரு புஸ்பமே வளருதே! எனக்குள்ளே எனக்குள்ளே இந்த மாற்றங்கள் ஏனடா? உனக்குள்ளே உனக்குள்ளே வாழ்கின்றேன் நானடா! உனை தொட உனை தொட துடிக்குதே நெஞ்சமே! பழகிய காலங்கள் பசுமையாய் தளிருதே! பனிதுளி பனிதுளி பட்டாம்பூச்சியாய் மிளிருதே! எனக்கான உலகிலே பறவைகள் இராட்சியம்! பசுமைகள் வழங்கிடும் குழந்தையின் குரும்புகள்! எனக்குள்ளே எனக்குள்ளே ஏன் இந்த மாற்றங்கள்? இன்று; புரிந்தது புரிந்தது என்னவன் நீயென! நீயும் புரிந்துகொள் புரிந்துகொள் உன்னவள் நானென! எனக்குள்ளே எனக்கு

42. தவிப்பு

நீ ஒரே ஒரு பார்வையை தான் வீசுகிறாய்; நானல்லவா இங்கே பாகாய் போகிறேன்! நீ ஒரே ஒரு புன்னகையை தான் உதிர்க்கிறாய்; நானல்லவா இங்கே சிதைந்து போகிறேன்! ஆனால்.......; நீ ஒரே ஒரு வார்த்தை கூற வேண்டி தான் எதிர்ப்பார்க்கின்றேன்; ஏனோ நானல்லவா இங்கே ஏமாந்து போகிறேன்!

41. கூறி விடு

என்னவனே! இதுவரை கேட்டதில்லை நீ என் பெயர் கூறி; இருந்தும் உன் பெயரை நொடி நீங்காமல் கூறுகின்றேன் எனக்குள்ளே - ஏன் உன்னிடம் கூட! என் ஏக்கங்கள் புரியவில்லையா? இல்லை....., என்னை உனக்காய் அலைய விடுகின்றாயா? எப்படியோ; எனக்குள் நீ வந்தாயிற்று உனக்குள் நான்? இது உறுதியாயின் கூறி விடு - ஒரே ஒரு தடவை மட்டுமாவது என் பெயரை!

40. உன்னத காதல்

உன்னருகில் நான் என்னருகில் நீ என நம்மருகில் நாம் இல்லாவிட்டாலும் நம்மனவறைகளில் நெருக்கமான இடங்களை அடைந்துவிட்டோம் - இன்னும் உனக்குள் ஏனிந்த அச்சம்??? பைத்தியக்காரி - இவர்களால் பிரிக்க முடிவது நம் உயிரையே! - நம் உன்னத காதலை அல்ல மரணம் தாண்டியும் உயிர்பெற்று துடிப்பது காதல்....!

39. புதுதாய் ஒரு ஜனனம்

என் கண்களில் பட்டும் படாமல் இத்தனை காலங்கள் எங்கிருந்தாய் நீ? உன் வருகை ஓர் உயிருள்ள உடலாய் உருமாற்றுகிறது என்னை என்றபோதும் என் கடந்து போன நாட்கள் உனைக் காணாமல் விரயமாகிவிட்டதை எண்ணி இதயம் இடிந்தே விழுகின்றது இத்தருணம்! உன் கருணை - என் இத்தனை கால கனவை பிரதிபலித்தல்லோ விட்டது - ஆம் நானும் வெற்றிவாகை சூடிவிட்டேன் எனக்குள்ளான உன் வரவால் உன் உதயத்தால்!

38. புரிந்துக் கொள்

Image
வாழ்வின் வசந்த காலங்கள் வழுக்கட்டாயமாய் வரவேற்கின்றன தான் எது எப்படியோ இறந்த காலங்கள் இன்னும் இறக்க மறுக்கின்றன் என்னுள்ளே எனக்குள்ளே! வாடிக்கையாகிவிட்ட வாலிபர் ஏமாற்றத்திற்குள் நானும் தஞ்சம் தான் இன்னொரு முறை - அதே வலியை சந்திக்க உடலில் வலு உள்ளதோ இல்லையோ மனதில் துளியும் இல்லை அந்த வலியை இன்னொருமுறை சந்தித்தால் நொறுங்கியே விடுவேன் மரணப்படுக்கைக்கே என்னை இழுத்து சென்ற அந்த வலி என் மபுணிப்பில் கூட மரணிக்காது இன்னிலை அறிந்தே மாற்றங்கள் வேண்டாமென மண்றாடுகின்றேன் இதன் சித்தமே இறந்தே கிடந்துவிடட்டும் என் உள்ளமும் என அவஸ்தைபடுகின்றேன் உன் அம்பு அதை தகர்த்தி துளிர்விட செய்திடுமோ என்வ அச்சமும் இன்று எனை சூழ பயணிக்கின்றது! ஜடங்கள் நடுவில் மனிதனாய் நான் கண்ட ஒரு சிலரில் நீயும் அடக்கமே உன் அன்புக்குள் நானும் கட்டுண்டு தான் அதனால் தான் மனம் இன்னும் மதுப்பளிக்கின்றது உனக்கும் உன் உறவுக்கும் இனி உலகில் உயிரோடு நானிருக்கும் ஒவ்வொரு மணிப்பொழுதும் உன்னிய மறவாது! நட்பே நாணயமானது அன்பனே; நட்பின் சிறைக்குள் சந்தோசமாய் நாமும் அடைப்படுவோம் சிட்டாய் சுற்ற

37. இன்றே தொடங்கிவிடு

Image
ஒரு கணம் - என் மரணத்தை வென்ற அந்த ஒரு கணம் உன் கண்கள் தீண்டியதே தான் ஏனோ எனை கடந்த அந்த ஒரு கணம் ஓராயிரம் பட்டாம் பூச்சிகளையல்லோ எனை சுற்றி சிறகடிக்க வைக்கிறது உன் மெல்லிய இதயத்தின் ஓசைகள் - என் மறுத்துப் போண இதயத்தைக் கூட தட்டி எழுப்புகின்றதே ஏனோ இந்த மாற்றம்? எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கின்றேன் இதுவும் பருவகால மாற்றம் தான் நாளை மீண்டும் என் இதயம் இறந்துவிடும் என்பது புரிகின்றது தோழனே; தெளிவாய் உரைக்கிறேன் எனக்காய் நீ உன் நாட்களை விரயமாக்குவதை விடுத்து உன்னவளை தேடி - உன் பயணத்தை தொடங்கிடு உனக்கானவள் உலகில் உயிர்ப்புடன் உன் நன் மனதிற்கு வெற்றி உன் இதயகதவை தட்டும்! உன் வாழ்வு ஒளிபெறும்!

36. வேண்டுகோள்

Image
உன் காத்திருப்பு தேவையற்றது மறுத்துப் போண இதயமானால் நீ முயற்சி செய்யலாம் சில வேளை உயிர்ப்படையும் என்னதோ; மரணித்துப்போண இதயம் என்பதை புரிந்துகொள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகத்தானவை அர்த்தமனவற்றுக்காய் அதனை பயன்படுத்து அனாவசியமாய் எனக்காய் உன் நாட்களை விரயமாக்காதே வீணான முயற்சியது கானலாய் நான் நீயும் கானலாக அனுமதிக்க மறுக்கிறது மனசு வேண்டாம் நண்பனே நீ வாழ வேண்டியவன் வாடிட முயற்டிக்காதே வாழ முயற்சி!

சொல்லிவிடு

எனை வெட்கப் பூக்கள் சூடிக்கொள்கின்றன உன் கண்களை நேராய் சந்திக்க நேரும் தருணங்களில்! பெண்மையே....! உனக்குள் எத்தனை மென்மை வியந்து போகின்றேன் விடை காணாமலும் போகின்றேன்! உன் குரலை கடன் வாங்கித் தான் குயில்களின் காணமோ? உன் நடையின் நழினம் வாங்கித் தான் மயில்களின் நடனமோ? உன் ஒவ்வொரு அசைவும் அகிலத்தின் அசைவாக உன் ஒவ்வொரு செயலும் அலை மோடும் கடலாக எனை ஆட்சி செய்கின்றன! என்னவளே....! எத்தனை நாட்கள் தூரமாய் உனை அணைப்பேன்? உன் பார்வைக் கணைகள் பட்டு "பியுஸ்" இழ்ந்தும் பிரகாசமாய் ஒளிக்கிறது என் நாட்கள்! பிரபஞ்சத்தின் பேரழகி நீயில்லை தான் ஏனோ; பிரம்மை இவன் நாட்களை ஆட்சி செய்யும் பேரழகி ஆகிப்போனாய்! மௌனத்தால் மொழி பேசும் என் மங்கையே; உன் மௌனப் பூட்டை உடைத்து மனதார சொல்லிவிடு ஓரு வார்த்தை "ஐ லவ் யூ" என.... எனக்கானவள் நீயென்பதை என்றோ உணர்ந்து விட்டேன் உனக்கானவன் நானென்பதை நீ அறியும் நாளெதுவோ?

35. வினாத் தொடுப்பு

தீப்பிளம்பு தாண்டிய நீரலை தினம் தேடும் தீண்டலை ரசிக்க துடிக்கும் மனதினை சுமந்து நடக்கும் பூ இவள்! (தீப்பிளம்பு) எந்த தாயின் சுவாசம் தொட்டு சேயவனும் துடித்ததுண்டு? எந்த காற்றின் தழுவல் தொட்டு உயிரதுவும் உறைந்ததுண்டு? (தீப்பிளம்பு) பேசி விட இருந்ததுவோ ஒரு தருணம் பேசாமல் கழிந்ததுவோ பல தருணம் இதயமே..... இதயமே..... உன் விழி தீண்டலால் வினாக்கணைகளை தொடுத்துவிட்டு விடைகளை தர மவுத்தலில் நியாயமுண்டோ? (தீப்பிளம்பு) நிஜத்திலும் நிழலிலும் நினைவிலும் கனவிலும் நீட்சி செய்து ஆட்சி செய்துவிட்டு அருகருகே இருந்த போதும் - எனை அண்டாமல் செல்வதேனோ? (தீப்பிளம்பு)

34. யார் நீ...?

என்னோடு பேசிக்கொள்ள; என் உணர்வுகளோடு ஒன்றிப்போக; யார் நீ...? என் எழுத்துக்களில் உயிர் பெற்றெழ; கருத்துக்களில் கரு பெற்றெழ; யார் நீ...? என் மனவறைக்குள் அமர்ந்துக்கொள்ள; மதியோடு ஒட்டிக்கொள்ள; யார் நீ...? தேடித் தேடி அன்பு செய்ய; விரட்டி விரட்டி உதவி செய்ய; யார் நீ...? என் சோதனையில் பங்கேற்க; வேதனையை பகிர்ந்து கொள்ள; யார் நீ...? என் வலிகளை தாங்கி கொள்ள; விழி நீரை ஏந்திக் கொள்ள; யார் நீ...? எனை மடிமீது சாய்த்துக் கொள்ள; மனதோடு சேர்த்துக் கொள்ள யார் நீ...? என் ஒளியில் ஒளி சேர்க்க; ஒலியில் ஒலி சேர்க்க; யார் நீ...? தனக்கென வாழும் உலகில் எனக்கென வாழ்ந்துவிட யார் நீ...?

33. அப்பா!

அன்பின் உருவமே அப்பா கனவில் கூட நினைக்கவில்லை காளனோடு செல்வீரென - உயிரை பிழிந்து எடுக்கிறது வலி - உறவாய் உயிராய் ஒன்றித்து போனது நீ தானே? நீ எனை விட்டு சென்ற நாட்களின் சேர்க்கை தசாப்த காலத்தை எட்டிக் கொண்டிருக்கின்றது ஆம்! நீ எனை வீசிச் சென்ற 9 வருடங்களும் வெருமையாயல்லோ கழிந்துவிட்டது எனக்கு! ஊரோடு ஒன்றாய் வாழவே விரும்புகின்றேன் உனை போல யாரும் இல்லையே யான் என் செய்வேன்? உன்னோடு களித்த பசுமையான நாட்களை சிந்திக்கும் போது கூட முடிவதாயில்லை துக்கம் தொண்டை குழியை அடைக்கின்றது! என் உள்ளத்து அன்பினை முழுவதுமாய் உன் மீதே செலுத்தியதால் அன்பு செய்ய முடியவில்லை உனை போல யார் மீதும் நடைப்பிணமாய் நானாகி போனேனே! முடிந்தவரை முயற்சித்து தோற்றுவிட்டேன் உன் நினைவுகளை மீட்டாமல் விட! - நான் முழுமைப் பெற்ற மனிதனாய் உனை போற்றியதனாலா முடித்துக் கொண்டாய் உன் கதையை நான் முழுமை பெறும் முன்னமே? உனை போலவே பிறரையும் நேசித்தாய்; உண்மையை உணர்த்தி நின்றாய்; நான் நினத்ததெல்லாம் கிடைக்கச் செய்தாய்! நீ மட்டும் ஏன் விட்டு சென்றாய்? எனை தவிக்க விட்டுச் சென்றாய்?

32. உனக்காக

என்னவனே, எனக்குள் அணுவாய் தொலைந்த என்னுயிரே உன்னால் உனக்காக எத்தனை தவிப்புக்கள் இதயம் இடம்மாற தவிக்கவில்லை உனக்குள் இடம்மாறியதால் தவிக்கிறது இருந்தும் தடம்மாற போவதில்லை உனக்குள் உள்ள மென்மை கண்டு என் பெண்மை நாணிப்போகின்றது உன் மூச்சை கடன் வாங்க பிடிக்காமல் திருட முனைகின்றது என் நாட்கள் மட்டுமல்ல மணித்துளியான விநாடிகளும் உன் நாமம் உச்சரித்த வண்ணமே ஏனடா…….? எதற்காக இத்தனை அவஸ்தைகள் உன்னால் மட்டும் செத்து பிழைப்பது புரியவில்லையா……? உன் மடிசாயும் அந்நொடி எப்போ ஏக்கத்தோடு இவள் சின்ன இதயம் உனக்காக உயிர்தாங்கி… அன்பனே உனக்காக உனக்கே உனக்காக மட்டும்!

31. தூக்கத்தின் துக்கம்

என் கனவுகளுக்கு கைகள் இல்லைதான் ஆனால் சிறகடித்தல்லோ பறக்கின்றன ஆம் கனவுகளில் மட்டுமே தூங்கிப்போண என் உணர்வுகள் துயிலெழுகின்றன கனவே உன்னால் தான் நான் கவி வடிக்கின்றேன் அதற்கு காரணமும் என்னவனை தாங்கி நீ வருவதே என் கனவு கானலானதோ யானறியேன் நான் தவறாய் செல்கின்றேனோ அதுகூட யானறியேன் இன்றென்னவோ நானறிந்ததெல்லாம் என்னவனே உன்னைதான் உனை மட்டும் கட்டிக்கொண்டுதான் என் கனவுகள் என் இந்த இன்ப கனவுகள் தூங்கும் போது வருவனவல்ல நான் விழித்திருக்கும் போது தான் அதிகம் வருகின்றன சிலவேளை இவையும் எனக்குள்ளேயே தூங்கிப்போய் விடுமோ? துடிக்குது மனசு உனக்காக மட்டும் தான் துயில வைத்துவிட மாட்டாயே?

30. விடிவில்லாத விடியல்

எதிர்ப்பார்ப்புக்கள் எட்டிப்பார்க்கும் போது அங்கே ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன! சுவாசத்தின் சூடு கூட எரிமலையாய் எரிக்கின்றது! தாகத்தின் தேடலுக்குள் வரட்சியே வாழுகின்றது! எப்படியோ....., எப்போதோ......., இருண்டுபோன எந்தனுக்குள் சோர்வமர்வு மீண்டும் சூடிக்கொள்கின்றது! ஓ..... சிங்கத்தின் குகைக்குள் அடைப்பட்ட முயலாய் அன்றுமட்டுமல்ல இன்றும் பெண்களின் வாழ்க்கை இனியாவது…………?

29. தவிப்போடு ஒரு மனசு

என்னவனே, ஏனடா இத்தனை தவிப்பு உன்னால் மட்டும்? உனை ஒருமுறையாவது சந்தித்து விட துடிக்குது மனசு உனை ஒருமுறையாவது ஸ்பரிசித்துவிட ஏங்குது நெஞ்சம் உனக்காய் வாழ்வதில் தான் எத்தனை இன்பங்கள் உனக்குள் தொலைவதில்தான் எத்தனை கோடி களிப்பு ஏனோ, உலகமே எனக்குள் இருப்பதாய் ஒரு உணர்வு நீ என்னோடு இருப்பதால் நான் உனக்குள் தொலைந்ததால் வாழ்வதாயின் உன்னோடு மட்டுமே வாழ்ந்துவிட கேட்கின்றேன் மாள்வதாயினும் உனக்காய் மட்டுமே மாண்டுவிட கேட்கின்றேன் உனை சுவாசிப்பதனிலும் உனை அணுவணுவாய் ரசிப்பதனிலும் இன்பமுண்டோ எனக்கு? உனை ஆதிமுதல் அந்தம் வரை எனக்கே கேட்கின்றேன் என்னவனாய் மட்டும்! உனை சந்திக்க போகும் அந்த நாள்………………… எப்போது கிட்டுமென எனையே நொந்து கொள்கின்றேன் எனக்குள் நீ வாழ்கின்றாய் என் இறுதி வரை வாழ்ந்து கொண்டே இருப்பாய் என் மூச்சு நிற்கும் வரை உனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்றபோதும், உனை என்னருகிலேயே கேட்கின்றேன்! உன் சந்தோசத்தில் பங்கேற்பதற்கல்ல நீ இடிந்து போகும் நேரங்களில் உன் துணையாய் துணைவியாய் தாயாய் மாற…………!

28. உனக்காய் உனக்காய் மட்டுமே!

அன்பாக அரவணைக்கும் உன் தோள்களிலே தலை சாய்த்து; உன் மார்பு சூட்டில் குளிர் காய்ந்து; உன் மடி மீது முகம் புதைத்து; வாழப்போகும் அந்நாட்கள் தரும் இன்பத்தை……; சொர்க்கத்தை……; இன்னொரு ஜென்மம் எடுப்பினும் தரமுடியுமா இவர்களால் எனக்கு? உன்னாலே உயிர் பெற்றேன்! உன்னாலே உணர்வுகளை சுவாசிக்கின்றேன்! உனை பிரிவதனிலும் பிரிவது என் உயிராயிருக்க ஆசைப்படுகின்றேன்! அன்பனே.....; - என் அன்பானவனே..........; அடைக்கலம் கேட்கின்றேன் உனக்குள் மட்டும்! சிறைக்கைதியாயல்ல; ஆயுள் கைதியாய்! என் ஒவ்வொரு நாளையும் உனக்காய் உனக்காய் மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன் நீ எனக்குள் வாழ்வதால்! உனை சிந்திக்க மறந்தால் என் இதயம் சின்னாபின்னம்தான்! மறு ஜென்மம் நான் பெற்று உயிர்ப்பதாயினும் உனக்காய் உயிர்க்கவே ஆசைப்படுகின்றேன்! - மீண்டும் உயிர்விட்டு போவதாயினும் உனக்காய் உயிர்விட்டு போகவே ஆசைப்படுகின்றேன்! என்னவனே எனக்குள்ளேயே தொலைந்துவிடு என் இறுதிவரை! உனை நீங்கி துளி தூரம் நகராது என் நாட்கள் உயிருக்குள் உயிர்தாங்கி நீ இருப்பதால்!

27. நீ வேண்டும்

பேச மறுக்கும் உன் நினைவுகளோடு பேச துடிக்கும் என் மனதுடிப்பை கட்டி வைக்கின்றேன்! கனவுகளிலும் கொஞ்சம் தள்ளியே நிற்கின்றேன் கனவு காணும் என் வாழ்க்கை கானலாய் மட்டுமே போய்விட கூடாதென்பதற்காய்! நான் உன்னோடு வாழவே தவிக்கின்றேன் என் உயிரின் உணர்வே நீ என்பதால் உன் அன்பின் ஆழத்தால் அடங்கி போகின்றேன் உனக்குள்ளேயே! உன் அரவணைப்பால் ஆடிப்போகின்றேன் இருந்தாலும் இறுதிவரை இதே உறவாய் உனையே கேட்கின்றேன் என் உறவாய்......... என் உணர்வாய்....... என் உயிராய்......... இதே உறவாய் உனையே கேட்கின்றேன் என் முடிவு வரை! உனக்காகவே என் நாட்கள் உயிர்ப்போடு………………! உனக்காகவே நான் உயிரோடு………………!

26. நண்பியே இனிமையான இத்தினத்தில் அகம் திறக்கின்றேன் உனக்காய்

நங்கையே நட்பின் நண்பியே; உன் மடல் கண்டு அகம் குளிர்ந்தேன் கோடி நமஸ்காரங்கள் உன் அன்பிற்கு! உன் மனக்குமுறல்களின் வெளிப்பாடுகள் விடை காணா வினா கொத்துக்களாய் எனக்குள்! உன் வலி தாங்கி இதயத்தின் சுமை தாங்கி நான் கொட்டிவிடு எனக்குள் - உன்னில் களி பிறக்கும்! சோதனையும் வேதனையும் தெரிந்திடாவிட்டால் வாழ்வின் அர்த்தம் (உயர்வு) உணரப்படாமல் உதிர்த்தப்பட்ட சருகாகிடுமோ? நிலைமாறும் உலகம் இது நீ மட்டும் தளர்ந்திடாதே எள்ளி நகையாடி ஏளனம் செய்யும் இவ்வுலகம் - இதன் நாக்கில் நரம்பின்மையோ? ஊமை நரகமிது உதறி தள்ள துடிக்கிறது உன்னை மட்டும் என்ற போதும் - உன் தோல்விகளில் கை கொடுக்க இறுதிவரை உன் பெற்றோர் மட்டுமே! மனதளவில் நொந்துவிட்டாய் அதற்காக உன் வாழ்வை மபுணித்து கொள்ள உன் வயதோ அனுபவமோ போதியதாயில்லை! உனை போல பல்லாயிரம் அடிகளும் இடிகளும் என் இதயத்தில் கூட வலி தாங்கி பழகியதால் வழு கொண்டு துடிக்கிறது என் இதயம் இன்று! உன்னதோ பிஞ்சு இதயம் தளம்ப விடாதே அதனை தளர்ந்து விடுவாய்! நொந்து விடாதே செல்லம் நொறுங்கிவிடும் மனசு உன் துயரங்களில் தோல் கொடுக்க உன்னுயிர் தோ

25. நாளைய விடியல்

ஒவ்வொரு அஸ்தமனமும் விடியலை நோக்கி புறப்பட என்னதோ உனை தளுவ வியக்கின்றது! என் எழுதுகோள் ஏறி நின்றல்லோ - உன் நாமத்தில் ஸ்வரம் சேர்க்கின்றது! உன்னால் நேர்ந்த தோல்வியிலும் ஒரு சோகம் தோற்றம் பெருகின்றது! ஒரு வேளை நமக்குள் இந்த பிரிவு நேராதிருப்பின் நம் உறவின் உயர்வும் மண்ணாயிருக்குமோ? இன்று, என்னுள் வடுக்கள் இருந்தப்போதும் வலிகள்(வருத்தம்) இல்லை மறைந்தது நம் உறவாயிருக்கலாம் மாறாதது நம் நினைவின் உணர்வு! வாழ்க்கை வாடிவிடவில்லை சுவையமுது பொழிகிறது விரும்பிய நீ விளகியதனாலோ! உன்னால் வாழ துடிக்கிறது மனசு உன்னோடில்லாவிடினும் நீ சுவாசிக்கும் மூச்சின் முன்னாலாவது! நீ தந்த ஏமாற்றம் தான் என்னுள் முதற்படி இன்று என்னோடு நீ இல்லாத போதும் என் நாளைய விடியலின் உதயத்திலும் - உன் நினைவுகளோடு பேசிக்கொள்ள உயிர்த்தெழுவேன் உன் நேற்றய காதலியாய்!

24. மாறுபாட்டுடன் ஊணம்

என் உயிரோட்டத்தின் ஊணங்கள் மௌனமாய் திரியும் தருணங்களில் களைப்படையும் நான் வார்த்தைகள் கொண்டு தெளிக்கப்படும் போது இடிந்து போவதில் நியாயமில்லை தான்! இருந்தும்; இருட்டறைக்குள் இல்லையே நான் என்னை நெளிர்ரப்படுத்திய பின்னரே, உன்னோடும் ஊரோடும் சல்லாபம்! உங்களை சொல்லி குற்றகில்லை உங்களுக்குள் உறங்கிப்போண உணர்வுகளில் தான் ஊணம்!

23. வினா?

நிமிடத்தின் நீளத்தில் நீட்டப்பட்ட நம் உயிர்ப்பு நீரின் நீளணைப்பால் நில்லாமல் போனதேனோ?

22. சொல்ல முடியாத சோகம்

கருவறையின் பிறப்பிடமாய் கரு நீல காரிருலாய் கனத்ததொரு மனதினொடு கன்னிகையால் காத்திருந்தால் சொப்பனங்கள் அற்பமென சொன்னதொரு காலமிது தித்திக்கும் தினங்களிலே திவட்டாத இன்ப துளிகள் (அன்பு துளிகள்) எப்படியோ இருந்த மாது இப்படியேன் ஆக்கப்பட்டாள்? சோதனையும், வேதனையும் சொல்லாமல் வருவனதான் ஆனால், சொட்டும் இடைவெளியின்றி சொந்தமானால் என் செய்வாள்?

21. தருணம்

உன்னால் மீண்டும் மீண்டும் ரணமாக்கப்பட்டதனால் உன் மீதான அதே, பழைய அன்பு இல்லை, பரிவு இல்லை, பாசம் இல்லை, மனதால் பார்ப்பதற்கு கூட முடியாமலில்லை விரும்பவில்லை! என் உறவு ஏதோ தொடுவான நினைவோ? என் ஏக்கங்கள் புரியவில்லை ஏமாற்றங்களின் வலி அறியவில்லை தனிமையின் தாகம் தெரியவில்லை பின் ஏன், நான் உனக்கு.....? நீ எனக்கு.....? நாம் நமக்கு.....? நான் நம் வழியில் புறப்படலாமே! என் பாதையை நோக்கி என் பயணங்கள் பயணிக்க தொடங்கிய வண்ணம் உன் விடைபெறல் முடியாமல்...... முற்றுப்புள்ளி.....? இது தொடர் கதை அல்ல சுபமான முற்றுகை!

20. விளைவு

தொலைவாகி போண என் தேடலை தொடத்துடித்த தொடக்கமே....... தொலைவாகி போனது என் தேடல் மட்டுமல்ல நானும் தான்...! தொட்டுப்பார்க்க விரும்பி நெருப்பை உள்ளே சுட்டுப்பார்த்தவள் நான் கூடத்தான்! கானலாகிய காலங்களை கடந்து சென்றது போதாதென நின்று பார்த்ததால் இன்று; நானே கானலாய்! எல்லை மீறிய என் துடிப்பை எட்டிப்பிடிப்பதாய் கூறி எரியப்பட்டவளும் நான் தான்! இத்தனைக்கும் காரணமாய் என்னுள் நின்ற உன்னை விட்டு இன்று; தொலைவானவளும், சுடப்பட்டவளும் கானலானவளும், நான் தான் நானே தான்...!

19. ?????????

கனவுகளின் கருவுக்குள் நினைவுகளின் நிலையிருப்பு கழியுகத்தில் உதித்ததடா நிலையான போர்த்தொடுப்பு...!

18. ரணப்பட்ட மன ஓலம்

என் மனதை சல்லடையாய் சலிக்கும் உன்னை சந்திக்க துடித்த நாட்களின் தொகையை சிந்திக்கும் போதே நஞ்சுக்குள் நெருஞ்சி முட்கள் மறு ஏவுகணை தாக்கமாய் மதில் சுவரிடுகின்றன! உன் கரங்களில் கருணை மலர்களை எதிர்ப்பார்த்த எனக்கு கைவிட்டுப் போண கசங்கிய கைக்குட்டை தான் பரிசுப்பொருள் என் கைகளின் சோகத்தை உணர்ந்து பேனையின் உணர்வுகள் வடித்த இரத்த கண்ணீர் கறைகள் காகிதத்தில் கோலம்! ஆரிய காயங்கள் மீள் சுழற்சி செய்கின்றன! "நீ எனக்கு சொந்தமில்லை" என்றோ மனதில் விழுந்த நினைவுகளை மீட்டி பார்க்கின்றேன் என்னுள்ளான, சுமைகளின் கணத்தை முட்டி எழ நினைக்கும் என் உணர்வுகளை மீண்டும் நானே குட்டி குனிய வைக்கின்றேன் சிறுக சிறுக பொக்கிஷமாய் சேர்த்த கனவு வாழ்க்கை கனவாகியே போனதனால்!

17. தனிமை

தொகை நடுவில் தொடர்பாடி தொடர்ந்த என் பயணத்தை திக்கற்ற இடத்தினிலே திணற வைத்த கொடூர அரக்கன்!

16. தேடல்

வாழ்க்கை என்னை தேடிய போது வாழ்க்கையை நான் தொலைத்தேன் வேடிக்கையாய்! இன்றோ; வாழ்க்கையை நான் தேடும் போது வாழ்க்கை என்னை தொலைக்கிறது வாடிக்கையாய்! இது தான் யதார்த்த உலகின் நியதி!

15. காயத்தின் கதறல்

நீ இல்லா இரவு தரும் நிந்திப்பின் நடுவில் நின்று தான் விடுகின்றது இதயம்! நித்தம் நித்தம் உன் மடியில்; நிம்மதியாய் களித்துவிட்டு திடீர் பிரிவு......... தனை நிராகரிக்கின்றது மனசு! உன்னால் முடிகின்றது! என்னால்....... எனக்குள்....... மூழ்கடிக்கப்படுகின்றது! நீ இல்லாத பொழுதுகள் ஓராயிரம் யுகங்களாயல்லோ சாகடிக்கின்றது என்னை! சாய்க்கப்பட்டல்ல, சருகாக்கப்பட்ட எனக்குள் சங்கமமாகிய உன் அலைகள் தான் மறுபிறப்பு எனக்குள்! மருந்தும் விருந்தும் நீதான் நீ மட்டும் தான்! இருந்தும் உன்னால் விழும் கல்லடிகள் என் கல்லறைகள் தான்! எத்தனை நடந்தும் விளகவும் இல்லை விளக விடுவதும் இல்லை என்னை உன் நினைவுகள் உன் அணைப்பிலிருந்து! என்றென்றும் உன் நினைவுகளுடன் சுவாசமாய் உனைத்தேடும் உன்னவள்!

14. புரியாமை

எனக்குள் ஏன் இத்தனை தவிப்புக்கள் துடிப்புக்கள் தடுமாற்றங்கள் மீண்டும் மீண்டும் எனை நானே கேட்கின்றேன் இருந்தும் முற்றுபெறாமல் என் வினாக்கள் தொடர்கதையாய்.... நான்.....; நீ.....; நாமாகி ஈரிரண்டு வருடங்கள் இருந்தும் ஏன் இன்னும் அதே ஏக்கம் என்னுள் நீ தான் என்னவனாய் விட்டாயே பின்னும் ஏன் இந்த வலி உன்னால் நான் இன்பமாக தான் இருக்கின்றேன் இருந்தும் ஏன் எதையோ தொலைத்த உணர்வு என்னில்?

13. kaathal

உண்மை அன்பில், காதலில் சோர்வென்னும் நிலைக்கே இடமில்லை; அது என்றும் இறப்பதுமில்லை...! உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்துப்பார்; நேசித்த உள்ளத்தின் கோபம் கூட சுகமாக தெரியும்...!

12. வினா?

புரிதலினாலான பிரிதலும் காதலோ...?

11. ஆசை

அடிக்கடி என்னை ஆர்ப்பரிக்கும் உன் நினைவுகளை மீட்டி பார்க்கின்றேன் அத்தனை துடிப்பிலும் - உன் காதலின் வாசனை சுவாசிக்கின்றேன் உன் நினைவுகளை சொர்க்கத்தை தொட்ட உணர்வே...! எனக்குள் நீ என்னோடு இருப்பதால் என் மபுணிப்பு மட்டும் உனக்காக வாழ துடிக்குது மனசு!

10. வாழ்வு

இருந்தாலும் உனக்காய் இருக்கின்றேன் இறந்தாலும் - உன் நினைவுகளோடே இறந்து போவேன்!

09. வேண்டும்

என்னோடு நீ இல்லாவிடினும் எனக்காய் துடிக்கும் உன் மனசு மட்டும் வேண்டும் என் கடை நொடி வரை

08. புரியவில்லை

அடியோடு வெறுத்தாலும் அடிக்கடி உன் நினைவுகள் ஓஓஓஓ...... இது தான் காதலோ...? புரியவில்லை இன்று வரை!

07. ஆறுதல்

உன்னை தேடும் கண்களுக்கு - ஆறுதல் உன் நினைவுகள் மட்டுமே உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு - ஆறுதல் உன் அன்பு மட்டுமே....!

06 அறியாமை

உன் நினைவாய் என்னிடம் இருப்பவற்றை எல்லாம் அழித்து விட வேண்டுமாம் இவர்கள் சொல்கின்றார்கள் - என் உயிரே நீயென்பது அறியாமல்..!

05 மரணம்..!

நீ இருக்கும் வரை தூரத்தில் இருக்கும்; அது உன்னை தழுவும் போது நீ இருப்பதுமில்லை

04 சிந்தனை சிறகினிலே

சந்தங்கள் சொல்லும் சிந்தனை சிறகினிலே நான்....... நீ......; நாளை நம்மோடு யார் யாரோ...?

03. ஏமாற்றம்

நீ சொல்வாயென நானும்; நான் சொல்வேனென நீயும்; காத்திருந்ததில், கடந்து சென்றது நாட்கள் மட்டுமல்ல நம் காதலும் தான்.....

02. விண்ணப்பம்

உன்னிடம் எனக்குள் ஒரு விண்ணப்பம் எனக்கான ஆயுளை கூட்டி கொடு எனது நாட்களை உன்னோடு - களிப்பதற்காய் மட்டும் ! உன்னோடு வாழ - இந்த நாட்கள் போதியதாய் இல்லை..!

01 காதல்...!

காதல்...! இரு கண்கள் சந்தித்ததனாலான இதய பரிமாற்றம்... - இது உணர்வுகளின் சங்கமம்