Posts

பெற்றோரின் பிள்ளைகள்

குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒரு தாயின் தோள்களில் மட்டும் முழு பொறுப்பையும் சுமத்திவிட்டு, “இது உன் கடமை…” என்று தந்தையின் கால்கள் விலகிச் செல்லக்கூடாது. பால் கொடுப்பது அவளால் மட்டும் தான் முடியும் ஆனால்,  பசியை உணர்ந்து உணவு தேடித் தருவது அவள் மட்டுமே செய்ய வேண்டியதல்ல… இரவு தூக்கத்தைத் தொலைப்பது தாயின் விதியல்ல, காய்ச்சலில் நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதும், பாடசாலைப் புத்தகங்களைத் திறந்து பார்ப்பதும், வீட்டுப்பாடம் கேட்பதும், தவறும்போது திருத்துவதும், தடுமாறும்போது தோள் கொடுப்பதும் தந்தையின் பங்கும் தான். “எனக்கு செய்யத் தெரியாது…” என்று சொல்லி விலகுவது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் கற்றுக்கொள்ள முயலாமல் இருப்பது பொறுப்பிலிருந்து விலகுவதற்கான ஒரு தந்திரம். குழந்தையைப் பெற்றது ஒருவர் அல்ல… இருவர் . அப்படியிருக்க, பொறுப்பைப் பகிர்வதில் மட்டும்  ஏன் இத்தனை தயக்கம்? குழந்தையின் சிரிப்பில் இருவருக்கும் உரிமை இருப்பதைப் போல, அதன் அழுகையிலும் இருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். தாய் மட்டும் குழந்தையை வளர்க்கவில்லை; தந்தையும் அந்த வளர்ப்பில் தனது நேரத்தை, அன்பை, பொறுமையை, உழைப்பை வ...

விளக்கங்களுக்கு அப்பால்

நம் மீதான தவறான புரிதலை விளக்கியும், புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடம் மீண்டும் மீண்டும் முயற்சிப்பது முட்டாள்தனம்… சில உண்மைகள் விளக்கப்பட வேண்டியவை அல்ல; காலம் அவற்றை தானாகவே சொல்லிவிடும். நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ள யாருக்கோ உரிமை இருக்கலாம்; ஆனால், ஒவ்வொரு முறையும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருப்பது நம் கடமை அல்ல. நாம் சொல்வதைக் கேட்க மனமில்லாதவரிடம் வார்த்தைகளை வீணாக்காதே… நாம் காட்டிய அன்பையே சந்தேகித்தவரிடம், மீண்டும் மீண்டும் நம் இதயத்தைத் திறந்து நின்றுகொண்டிருக்காதே… சில இடங்களில் விலகிச் செல்வதே விடை. சில மனிதர்களிடம் மௌனமாக இருப்பதே மரியாதை. நம்மை உண்மையாக அறிந்தவர்கள், நம் விளக்கங்களைக் கேட்காமலேயே நம்மைப் புரிந்துகொள்வார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மாற்றுவதற்காக நம்மை நாமே தொலைத்துவிட வேண்டாம். தெரிந்தே தவறிழைத்திருந்தால், அது தவறு என்று உணர்ந்தால், மன்னிப்பு கேட்கவும் தயங்காதே. இங்கே பூரணமானவர்கள் என்று யாரும் இல்லை. உனக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்குத் தவறாகத் தோன்றலாம். அதனால், அவரின் இடத்திலிருந்தும் அந்தச் சூழலை அணுகிப் பார். ஆனால், நீ தவறிழைக...

மறுக்கப் பழகு

எல்லோருடைய விருப்பங்களுக்கும் வளைந்து கொடுத்துக் கொண்டே போனால், ஒருநாள் உன் விருப்பம் என்ன என்பதையே நீ மறந்துவிடுவாய். ஆதலால் தவறென்று தெரிந்ததை தயக்கமின்றி மறுக்கப் பழகு… உன் அமைதியை களவாடும் உறவுகளை மறுத்துவிடு. உன் மதிப்பைக் குறைக்கும் வார்த்தைகளை மறுத்துவிடு. உன்னைத் தேடாதவர்களை நீயும் தேடாதே. உன்னைப் புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடம் உன்னை விளக்கிக் கொண்டிருக்காதே. உன் வலியை பலவீனமாகப் பார்க்கும் கண்களுக்கு உன் காயங்களை நிரூபிக்காதே. ஒவ்வொரு முறையும் “It’s okay” என்று சொல்லி மறைத்து வைத்த வலிகளிடம் ஒருநாள் திரும்பிச் சென்று சொல் “That is not okay.” எல்லோருக்கும் நல்லவளாக இருப்பதற்காக உனக்கே அநியாயம் செய்துவிடாதே. உன் மனசாட்சிக்கு எதிராக வாழும் வாழ்க்கை யாரையும் திருப்திப்படுத்தாது. சில கதவுகளை மூடுவது கொடுமையல்ல அது சுயமரியாதை. சில மனிதர்களை விட்டுச் செல்வது தோல்வியல்ல அது தைரியம். சில அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதும் ஒரு பதில்தான். நினைவில் கொள்… “இல்லை” என்பது ஒரு சிறிய வார்த்தை. ஆனால் அதற்குள் உன் எல்லையும், மரியாதையும், சுதந்திரமும் இருக்கிறது. உன் எல்லையை மீறி வருபவர்...

ஹவுஸ் வைப்

Image
“ஹவுஸ் வைப்” அவளின் மொத்த உலகத்தையும் இரண்டு வார்த்தைகளில் சுருக்கி, அதை ஒரு கௌரவப் பட்டமாக அவள் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள். “உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் மட்டும் போதும்… வேலைக்குச் செல்லத் தேவையில்லை.” என்பதாகத் தொடங்கி, அவள் தலையில் ஓய்வில்லாத ஒரு பொறுப்பு குடியேறுகிறது. இதுவரை இருந்த தன் வீடு - தாய் வீடாகவும், இனி இருக்கப்போகும் தன் வீடு - மாமியார் வீடாகவும் மாறிப்போய், இரண்டு வீடுகளுக்கும் சொந்தமானவளாக இருந்தும் வீடற்றவளாக்கப்படுகிறாள். இரு வீடும் அவளுடையது - ஆனால் வீட்டு முடிவுகள் அவளுடையதல்ல. சமையல் அவளுடையது - ஆனால் அவள் விருப்பம் சமையல் பட்டியலில் இல்லை. துவைப்பது அவளுடையது, துடைப்பது அவளுடையது, பெருக்குவது அவளுடையது, எச்சில் தட்டுகளை அகற்றுவதும் அவளுடையது. முற்றத்தின் கடைசி இலையும் அவளுடைய குற்றமாகிறது. வீடு சுத்தமாக இருந்தால் அது இயல்பு. சிறிது அழுக்காக இருந்தால் - “வீட்டில் சும்மாதானே இருக்கிறாள்… அவள் இதைக்கூட செய்யமாட்டாளா?” குழந்தை படிக்கவில்லை - அம்மாவின் தவறு. Homework முடியவில்லை - அம்மாவின் கவனக்குறைவு. குழந்தை ஒழுங்கில்லாமல் வளர்ந்தால் - அம்மாவின் வளர்ப்ப...

தொலைதூர காதல்

Image
கண்கள் சந்திக்காமல் இதயங்கள் சந்தித்த ஒரு கற்பனை காதல் கதை  அத்தியாயம் 1 ஒரு “ஹலோ”வில் தொடங்கிய காதல் ஒரு இணையவழி சந்திப்பு... அது எப்படி நிகழ்ந்தது என்றே இருவருக்கும் தெரியவில்லை. முதலில், யாரோ ஒருவர் போலத்தான் பேசிக்கொண்டார்கள். “Hi... எப்படி இருக்கின்றீர்கள்?” என்ற அவன் குரல், அவளுடைய குருதி நாளங்கள் வரை சென்று ஒலித்து உறைந்தது. அன்று தொடங்கிய அந்த உரையாடல்,  நாட்கள் செல்லச் செல்ல நெருக்கமானது. எப்போது அவன் அவளுக்குப் பிடித்துப்போனான்? எப்படி பிடித்துப்போனான்? எதற்காக இவ்வளவு பிடித்துப்போனான்? எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. யாரென்றே முழுமையாக அறியாமல்,  ஒருவருடைய குரலுக்குள் ஒருவர் மெல்ல மெல்லத் தொலைந்து போனார்கள். ஒரு பின்னேரம்... எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்  அவன் திடீரென சொன்னான்: “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது... I love you.” அவள் அமைதியாகிவிட்டாள். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. அது உண்மைதான். அவனுடைய குரலும், பேச்சும், அவன் காட்டிய அக்கறையும் அவளுக்குள் ஏற்கனவே ஒரு இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால் அதை “காதல்” என்று சொல்லும் துணிவு மட்டும் அவளிடம் இல்ல...