காதல் அரும்பு
அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை நனைப்பதை இரசித்துக்கொண்டே அவள் தொடர்கிறாள். எந்த ஒரு குழப்பமும் இன்றி பிரகாசிக்கின்றது இதயம் - அவள் அடிகள் மெதுமெதுவாய் ஆனந்தம் நிறைந்த மனதுடன் முன்னேறுகிறது. மூளை தனக்கு தெரிந்த அனைத்து பாடல்களையும் நினைவுபடுத்த, இதயம் - அவன், அவளுக்கு எழுதிய நான்கு வரிகளின் முதல்வரிகளைத் தேடுகின்றது. மெட்டைப்பிடித்து முதல்வரியை கண்ட மகிழ்ச்சியை அவள் வெளிப்படுத்திய விதம் - வானவில் தன் வண்ணங்களால் சாலையை நிறைத்தது. இந்த நாள் இன்னும் நீண்டதாக தொடராதா என தோன்ற, அந்த நாளை, அவள் மெதுவாக நகர்த்த முனைகிறாள். அவளின் முகத்தில் பிரகாசமான புன்னகை இருக்கிறது. தன்னை நேசிக்கும் அவனை நினைத்து தடுமாறிக் கொண்டு போகிறாள்; காதலின் புகழ் ஒளி அவளுடைய கண்களில் விளையாடுகிறது - ஒரு கனவு போல, அந்த நிஜம். இதுவரை உணர்ந்திடாத ஒரு புதிய உணர்வுதந்து அவளது உள்ளத்தைக் கவர்கிறது. அனைத்தும் அழகாக தெரிகிறது. புதிதாகவும், புதுமையாகவும் இருக்கிறது. அவளை, அவளே அழகென்று ...