பெற்றோரின் பிள்ளைகள்
குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒரு தாயின் தோள்களில் மட்டும் முழு பொறுப்பையும் சுமத்திவிட்டு, “இது உன் கடமை…” என்று தந்தையின் கால்கள் விலகிச் செல்லக்கூடாது. பால் கொடுப்பது அவளால் மட்டும் தான் முடியும் ஆனால், பசியை உணர்ந்து உணவு தேடித் தருவது அவள் மட்டுமே செய்ய வேண்டியதல்ல… இரவு தூக்கத்தைத் தொலைப்பது தாயின் விதியல்ல, காய்ச்சலில் நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதும், பாடசாலைப் புத்தகங்களைத் திறந்து பார்ப்பதும், வீட்டுப்பாடம் கேட்பதும், தவறும்போது திருத்துவதும், தடுமாறும்போது தோள் கொடுப்பதும் தந்தையின் பங்கும் தான். “எனக்கு செய்யத் தெரியாது…” என்று சொல்லி விலகுவது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் கற்றுக்கொள்ள முயலாமல் இருப்பது பொறுப்பிலிருந்து விலகுவதற்கான ஒரு தந்திரம். குழந்தையைப் பெற்றது ஒருவர் அல்ல… இருவர் . அப்படியிருக்க, பொறுப்பைப் பகிர்வதில் மட்டும் ஏன் இத்தனை தயக்கம்? குழந்தையின் சிரிப்பில் இருவருக்கும் உரிமை இருப்பதைப் போல, அதன் அழுகையிலும் இருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். தாய் மட்டும் குழந்தையை வளர்க்கவில்லை; தந்தையும் அந்த வளர்ப்பில் தனது நேரத்தை, அன்பை, பொறுமையை, உழைப்பை வ...