விளக்கங்களுக்கு அப்பால்
நம் மீதான தவறான புரிதலை விளக்கியும், புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடம் மீண்டும் மீண்டும் முயற்சிப்பது முட்டாள்தனம்… சில உண்மைகள் விளக்கப்பட வேண்டியவை அல்ல; காலம் அவற்றை தானாகவே சொல்லிவிடும். நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ள யாருக்கோ உரிமை இருக்கலாம்; ஆனால், ஒவ்வொரு முறையும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருப்பது நம் கடமை அல்ல. நாம் சொல்வதைக் கேட்க மனமில்லாதவரிடம் வார்த்தைகளை வீணாக்காதே… நாம் காட்டிய அன்பையே சந்தேகித்தவரிடம், மீண்டும் மீண்டும் நம் இதயத்தைத் திறந்து நின்றுகொண்டிருக்காதே… சில இடங்களில் விலகிச் செல்வதே விடை. சில மனிதர்களிடம் மௌனமாக இருப்பதே மரியாதை. நம்மை உண்மையாக அறிந்தவர்கள், நம் விளக்கங்களைக் கேட்காமலேயே நம்மைப் புரிந்துகொள்வார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மாற்றுவதற்காக நம்மை நாமே தொலைத்துவிட வேண்டாம். தெரிந்தே தவறிழைத்திருந்தால், அது தவறு என்று உணர்ந்தால், மன்னிப்பு கேட்கவும் தயங்காதே. இங்கே பூரணமானவர்கள் என்று யாரும் இல்லை. உனக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்குத் தவறாகத் தோன்றலாம். அதனால், அவரின் இடத்திலிருந்தும் அந்தச் சூழலை அணுகிப் பார். ஆனால், நீ தவறிழைக...