Posts

நான் இப்படித்தான்

நான் இப்படித்தான்…  எல்லோருக்கும் பிடித்தவளாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் விதியல்லவே… எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் என் கடமையல்லவே… என்னைப் புரியாத ஒருவருக்காக, என்னை மாற்றிக்கொண்டு வாழ வேண்டிய அவசியமுண்டா? யாரோ ஒருவருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக, என் சுயத்தை இழந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப என்னை வடிவமைத்துக் கொள்ளல் என்னால் முடியாது. ஏனென்றால், எல்லோரையும் திருப்திப்படுத்த முயலும் வாழ்க்கையில், ஒரு கட்டத்தில் நம்மையே தொலைத்து விடுகிறோம். பிறர் விரும்பும் மனிதராக மாறிக்கொண்டே போனால், நமக்குப் பிடித்ததான வாழ்வை எப்போது வாழ்வது? நான் இப்படித்தான்… என் இயல்பு மாறாது. பிடித்தவர்கள் என் அருகில் இருக்கட்டும்; பிடிக்காதவர்கள் சற்று தூரத்தில் இருக்கட்டும். என்னை நேசிப்பவர்களின் அன்பை நான் மதிப்பேன். என்னை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் விலகலையும் நான் மதிப்பேன். ஏனென்றால், சில உறவுகள் அருகில் இருப்பதால்தான் அழகாக இருப்பதில்லை; சில தூரங்கள்தான் இருவருக்கும் நிம்மதியைத் தருகின்றன. என்னைப் பிடிக்காதவர்களை மாற்றுவது என் வேலை அல்ல. அவர்களின் மனதில் எனக்கான இடத்த...

நினைவும் வலியும்

வேகமாய் சுழலும் பூமிப்பந்தில் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்கின்றோம்  அத்தனை ஓட்டத்திலும், நம் மனதில் ஆழப் பதிந்ததென்னவோ இரு நினைவுகள் தான். ஒன்று, இன்ப நிகழ்வுகள்; மற்றொன்று, துயரத்தின் வலிகள். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது, நாட்கள் நகர்கின்றன, நினைவுகள் மங்கிவிடும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால், சில இன்பங்கள் மட்டும் இதயத்தின் ஓரத்தில் மீண்டும் மீண்டும் மலர்ந்து, மெலிதாய் வருடிவிட்டுச்செல்லும். அவ்வாறே,  சில வலிகள் மட்டும் மௌனத்தின் இருளில் மீண்டும் மீண்டும் உரசி  முள்ளாய் குத்திவிட்டுச்செல்லும். ஒரு பார்வை, ஒரு புன்னகை, ஒரு அன்பான வார்த்தை, ஒரு அணைப்பு— காலம் கடந்த பின்னும் மனதை வருடிச் செல்லும். அதேபோல், ஒரு காயம், ஒரு பிரிவு, ஒரு ஏமாற்றம், ஒரு கண்ணீர் துளி— ஆண்டுகள் கடந்த பின்னும் நெஞ்சை விட்டு அகலாமல் வலித்துக்கொண்டே இருக்கும். எத்தனை ஆழமான உணர்வலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அந்த நிகழ்வுகள்... அதனால்தானோ, காலம் அவற்றைக் கடந்து சென்றாலும் நம் மனம் மட்டும் அவற்றைக் கடந்து செல்வதில்லை. இன்பமும் துயரமும் வாழ்வின் இரண்டு கரைகள்; அவற்றுக்கிடையே ஓடும் நம் நி...

காதல் அரும்பு

அழகான, குறுகிய சாலை வழியில்  மழைச்சாரலின் துளிகள் தனை  நனைப்பதை இரசித்துக்கொண்டே  அவள் தொடர்கிறாள்.  எந்த ஒரு குழப்பமும் இன்றி  பிரகாசிக்கின்றது இதயம் - அவள்  அடிகள் மெதுமெதுவாய் ஆனந்தம்  நிறைந்த மனதுடன் முன்னேறுகிறது. மூளை தனக்கு தெரிந்த அனைத்து  பாடல்களையும் நினைவுபடுத்த,  இதயம் - அவன்,  அவளுக்கு எழுதிய நான்கு வரிகளின்  முதல்வரிகளைத் தேடுகின்றது.  மெட்டைப்பிடித்து முதல்வரியை கண்ட  மகிழ்ச்சியை அவள் வெளிப்படுத்திய  விதம் - வானவில் தன் வண்ணங்களால்  சாலையை நிறைத்தது. இந்த நாள் இன்னும் நீண்டதாக  தொடராதா என தோன்ற,  அந்த நாளை, அவள்  மெதுவாக நகர்த்த முனைகிறாள். அவளின் முகத்தில் பிரகாசமான  புன்னகை இருக்கிறது. தன்னை  நேசிக்கும் அவனை நினைத்து  தடுமாறிக் கொண்டு போகிறாள்; காதலின் புகழ் ஒளி அவளுடைய  கண்களில் விளையாடுகிறது - ஒரு  கனவு போல, அந்த நிஜம்.  இதுவரை உணர்ந்திடாத  ஒரு புதிய உணர்வுதந்து  அவளது உள்ளத்தைக் கவர்கிறது. அனைத்தும் அழகாக தெரிகிறது.  புதிதாகவும், புது...

புத்தகமும் புதிரும்

நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக,  படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை எத்தனை முறை மீண்டும் மீண்டும்  படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை  மீண்டும் பிரட்டிப்பார்ப்பதால் மனதை வருடும் அழகான நினைவுகளும், வதைக்கும் வலிகளும் உயிரை  உரசிவிட்டுச் செல்லும் - என் மனதை  தொட்ட கதை என்பதற்காக,  அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவரவர் இரசணைக்கு தகுந்தாற்போல  விருப்பு வெறுப்புக்கள் வேறுபடும் -  இதுதான் இருப்பதிலேயே சிறந்த  புத்தகம் என்ற வாதம் ஏற்பில்லாதது. அந்த புத்தகத்தை விட பிரம்மிக்க தக்க புத்தகங்கள் எத்தனையோ இருக்கலாம் - எல்லாம், எல்லார் மனதையும் தொடவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. காலத்தின் போக்கில் எத்தனையோ புதிர்கள் கலந்த புத்தகங்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கும். சிலருக்கு சிறந்த புத்தகங்கள் கிடைத்தும் இருக்கலாம், பலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம் - ஈற்றில் கிடைத்த புத்தகங்களை வாசிக்க வாழ்க்கை கற்றுக்கொடுத்திருக்கும்! Samyu❣️

தொலைத்ததால் தொலைந்தவள்

மயான அமைதியில் சூழ்ந்த இரவுகளில் கூட என் இதயத்தின் அத்தனை மௌனமான  கிசுகிசுக்களிலும் எங்கோ ஓர் மூலையில்  நீ சார்ந்த உரையாடல் இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது! பரஸ்பர அன்பு மெது மெதுவாக  வளரவே தொடங்குகிறது, அவை விடியலின் அரவணைப்பில்  ஒரு மென்மையான  புத்துணர்ச்சியை பரிசளித்து - என் ஒவ்வொரு வெற்று இடத்தையும் நிரப்புகிறது.  உன் பாசத்தின் பொழிவில்  நீடித்த பிரகாசம்,  நான் செல்ல விரும்பும் தூரத்தை தொடர்ச்சியாக வழிநடத்துகிறது. அது என் யாக்கையில் ஒட்டத்தை சீராக்க மென்மையாக எரியும்  ஒரு நிலையான சுடர்.  வானம் எட்டும் தூரம் போல  முடிலில்லா யாசகம் நீ - உன்னில் மேலே உள்ள நட்சத்திரங்களைப் போன்ற எதிர்பார்ப்புகள் எனக்கு என் நம்பிக்கையையும்  அன்பையும் ஒளிரச் செய்கின்ற அக்கினிச்சூரியன் உன்னில் என் நம்பிக்கையை மென்மையான கருணையில் வெல்லும் முயற்சி இருந்ததே இல்லை - இருந்தும் உன்மீதான என் காதல் நம்மை ஒரு புனிதமான  இடத்தில் பிணைக்கின்றன.  நம் கண்களின் சந்திப்பில் யாரும் உணர்ந்திரா ஆர்வம் நடனமாடும்  அவை என் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் உன்னுள் ஊ...

மன்னிப்பாயா

ரோஜாவை நேசிக்கும் மனங்கள்  எத்தனை முட்களுக்கு நடுவில் முட்டி மோதி அரும்பாய் துளிர்கிறது என்னும் வலியை நினைத்து பார்ப்பது கூட இல்லை - சிலர் வாழ்வும் அப்படித்தான் வெளித்தோற்றத்துக்கும் உணர்வுக்கும்  தொடர்பே இருக்காது  புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் புறம்பேசும் உறவுகளின் முன் முட்டி மோதி எழுந்து நிற்பதற்குள் சிலர் வாழ்வு முடிந்தே விடுகிறது என்னது ஏதோ ஒரு விளிம்பில் தொடுத்துக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இருந்தாலும், இதயத்தை குடைந்து எடுக்கும் வலி ஒன்று அவ்வப்போது வந்து போவது வழக்கமாகி போனது - மனசு நான் அடைந்த வலியை  யாருக்கும் கொடுத்துவிட கூடாது எனும் தெளிவில் தீர்க்கமாய் உள்ளது குத்திக்கிழிக்கும் வலி கொடியது  அதுவும் எனக்கு பிடித்த உனக்கு விரும்பியா கொடுத்திருப்பேன் என் அறியாமை, கோபம்  என் காதலையும் சேர்த்தே கல்லறைக்குள் தள்ளிவிட்டது மீளவும் முடியாமல் - முழுதாய் மூழ்கவும் முடியாமல்  தத்தளிக்கும் மனதுக்கு மருந்து நீ நலமாய் இருக்கிறாய் எனும் செய்தி மட்டுமே - நானே இல்லாமல் போனாலும் நீ மனம் தளராதே - மகிழ்வாய் இரு மன்னித்து விடு உனக்கு செய்த அத்தனைக...

தொட முடியாத தூரம்

எண்ணங்களின் ஓட்டம் எங்கோ செல்ல என்னை மெல்ல மெல்ல  சூழ்ந்துக்கொள்ளும் இருள் - நெஞ்சை இறுக பற்றிக்கொள்ளும் பயம் எதனால் என்று அறியாதிருக்க - நான் அறிவேன் என்ற பேரொளி, அச்சம் என்னை ஒருநொடி அனைத்து கொன்றது மெல்ல மெல்ல மெல்லிய ஒலியில் நீ யாரென்றேன் - உன்  மனம் தான் என்றது அது உலகமே அதிர உதிரம் உறைவதாய் அறிந்தேன் உதடுகள் ஏதோ முணுமுணுக்க அவயவங்களை அசைக்க முடியவில்லை மெல்ல மெல்ல மயங்கியே போனேன் மீண்டும் ஒரு கனவு கனவோ, என் நினைவுகளின் வண்ணமோ எனக்கு பிடித்தமான நினைவுகளை மட்டுமே கோர்த்து  வானவில்லாய் தொடுத்திருந்தது அழகிய கிராமம்  அதன் நடுவே சில வீடுகள் விளையாட்டு மைதானம் பள்ளி, மருத்துவர் என அத்தியாவசியமான சிலதும் உள்ளடக்களாக ஏனோ அந்த நினைவுகள் என்னை  மேலும் மேலும் இன்புற செய்தன தொடர்கிறேன் மயான அமைதி - தூரமாய் உன் குறுகிய கண்களோடு  சிரிக்கும் சிரிப்பின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது என் கண்களில் பிரகாசமாய் உன் உருவம்  மனம் முழுவதும் உன் ஆழமான நினைவுகள் நீ என்னை அருகில் வருமாறு அழைக்கிறாய் அப்படியே கண் விழிக்கிறேன்  தூரமாய் உன் உருவம் மறைந்து கொண்டிருந்தது...