அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ ... எப்போ .... என நாம் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த இரண்டாவது முறையாக ஒன்றுக்கூட்டப்பட இருந்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பிற்கான ஒழுங்குகள் நிகழ்ந்த வண்ணமாக ! ஆம் எதிர்வரும் மார்கழி மாதத்தில் நடாத்தி முடிப்பதாக அமைப்பு குழுவினர் தீர்மானித்துள்ளனர் . அது சார்ந்த விபரங்கள் நிகழ்ச்சி நிரலோடு கீழ்வருமாறு ; இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை , வெள்ளவத்தை ( ரொக்சி திரையரங்கிற்கு முன்னால் ) காலம் : 13/12/2009 ( ஞாயிற்றுக் கிழமை ) நேரம் : மாலை 2.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை நிகழ்ச்சி நிரலும், விளக்கமும் * அறிமுகவுரை - 5 நிமிடம் * புதிய பதிவர்கள் அறிமுகம் - 10 நிமிடம் ( முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்களை அறிமுகப்படுத்தல் ) * பயனுறப் பதிவெழுதல் - 35 நிமிடம் ( கலந்துரையாடல் ) பதிவுகளின் தன்மை , பதிவெழுதல் முறைமை , வீச்சு , தாக்கம் , மேம்படுத்தல் முறைகள் , பதிவுலகின் நன்மைகள் , தீமைகள் போன்றன . * பின்னூட்டங்களும் அவற்றின் தாக...