சிந்து பைரவி


இன்று சினிமா படங்களுக்குள்ள ரசிகர்களைப் போலவே தொலைகாட்சிகளில் பகுதி பகுதியாக பிரித்து ஒலி ஒளி பரப்பும் "டிராமா" க்களுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. திரைப்பட ரசிகர்கள் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் படம் என்றதும் அடித்துப் பிடித்து கொண்டு அதனை பார்ப்பதும், அது குறித்த கருத்துக்களை வெளியிடுவதும் குறுகிய காலத்துக்குள் விலக்கி வைக்கப்படுகின்றது ஆனால் இந்த தொடர் நாடகங்கள் இன்று அனேகமான நபர்களை தொலைக்காட்சிக்கு முன்னால் கட்டிப்போட்டு வைக்கின்றது. ஏதோ தம் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வாக அல்லது தம் வீட்டு உறுப்பினர்களைப்போலவே கருதி அவர்களுக்காக மகிழ்வதும், திட்டுவதும், கவலையடைவதும் பைத்தியக்காரத்தனமே என்றாலும் சில நேரங்களில் ரசிக்கவும் வைக்கின்றது.


எதுவாக இருந்தாலும் அதிலுள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு தீயவை தீயில் வைப்போம் அந்த வகையில் நான் இன்று உங்களுடன் பகிரப்போவது  ராஜ் டிவி வழங்கும் "சிந்து பைரவி" என்னும் தொடரின் ஆரம்பப்பாடலையே "டைட்டில் சோங்". சிந்து பைரவி தொடர் 800வது பகுதியையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது சிந்துவின் கதை இன்று மகள் சிந்துவின் கதையையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கின்றது


(அனேகர் பரம ரசிகர்கள் என்பது தெரிந்தே சிலரோடு என்னையும் குறிப்பிட்டுகின்றேன்), எனக்கும் உங்களில் சிலரைப்போலவே அந்த கதையோடு அத்தனை பிடிப்பில்லை என்ற போதும் எங்கிருந்தாலும் அந்த ஆரம்பப்பாடலை செவிமடுக்கும் போது ஏதோ ஒரு இனிமை என்னை மென்மையாக்குகின்றது மனதை இலகுவாக்குகின்றது இதோ அந்த பாடலின் அற்புத வரிகள் உங்கள் பார்வைக்காக:


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்













"அன்பு கரங்களில் அடைக்கலமானது...
அழகிய பொம்மை;
ஆண்டவன் கருணையில் வாழ்ந்திடும் ஏழ்மை...
அதுவே உண்மை!


சிலரது புதியது பழதானால்...
அது சிலர் வாழ்வினில் புதிதாகும்;
சிலரது உடைமைகள் உருவிழந்தால்...
அது சிலர் உறவாய் உருமாறும்!


பூங்குயில் தினம் பாடும் இங்கே.                                                                       ஆசையின் பல்லவி......


Comments

நல்ல வரிகள்...

நன்றி...

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு