ஆசைகளே இல்லாத மனிதன் இல்லை; அவனது ஆசைகளுக்கு அளவுகளும் இல்லை...! இப்படிபட்ட தன்மை கொண்ட மனித இனத்தில் பிறந்த எனக்குள்ளும் ஓராயிரம் ஆசைகள் இருக்கின்றன, அவற்றை ஒவ்வொன்றாக சொல்லிவிடலாம் என நினைத்து பிடித்தமானவற்றை அசைப்போட தொடங்கினேன்.... தொடர்ந்து கொண்டே போனது எனது ஆசை சங்கிலி அநியாயத்திற்கு, நாளுக்கு நாள் ஒவ்வொரு ஆசையாக கூடிகொண்டே போகுதே தவிர குறைவதாக இல்லை. என்னடா இது? இப்படியே நீண்டால் முதலாவது ஆசை என்னவென்று எனக்கே மறந்து போய்விடுமே என்ற பயம் நெஞ்சுக்குள் வந்து என்னையே பயமுறுத்தியது. அன்றிலிருந்தே... நீயா நானா என பார்த்து விடுவோம் என பயத்தோடு போட்டியிட்டு என் நினைவேட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். அவற்றுள் சிலவற்றை உங்களுக்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (விஷேட குறிப்பு: உங்களுக்கு பிடித்தாலும் வாசிங்க, பிடிக்கவில்லை என்றாலும் வாசிங்க) *அப்பா...., எனக்கு முதல் அறிமுகம் அம்மாவாக இருந்தாலும் நான் ஒட்டிக்கொண்டதென்னவோ இவரோடு தான். அப்பா என்று சொல்லும் போதே மனசு இலகி போயிடுங்க, அப்பாவைத் தான் இந்த உலகத்திலேயே எனக்கு அதிகமாக பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னை அனுஅணுவாக இ...
Comments