Posts

Showing posts from April, 2025

கொள்ளாமல் கொள்ளும்

தூக்கம் வருடுவதாய் இல்லை - அந்த நீண்ட இரவில் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தேன் அத்தனையும் உன்னை அணைத்தபடி! எந்த ஒரு நீண்ட பயணமும்  உன்னோடு தொடரவில்லை உன் கைவிரல் கோர்த்து எந்த காதல் நாடகமும் இடம்பெற வில்லை! அப்படி உனக்கு பிடித்த எதையும்  செய்ய நீ கேட்டதும் இல்லை என்னை முழுதாக பிடிக்கும் என்பதை மட்டும் அடிக்கடி என்னிடம் கூறுவாய்! அப்படி ஒன்றும் நான் சிறப்பானவள் இல்லை ஆடவர் மயங்கும் அழகும் என்னில் இல்லை இதை தாண்டி எந்த திறமையும் இல்லை இருந்தும்  உனக்கு என்னை பிடிக்கும் என்பது எனக்கே ஆச்சரியமாயிருக்கும்! அப்போதெல்லாம் உன்னைச் சுற்றி எத்தனை பெண்கள் - உன்னை காதலிப்பதாய் சொல்லியிருப்பார்கள் எல்லாம் விட்டு என்னை தேர்ந்தது ஏன்? புரியாமல் இன்றும் நான்! அப்படி உன்னை விரும்பிய யாரையாவது நீ தேர்ந்திருந்தால் உன் வாழ்வு  இன்னும் சீராயிருக்குமோ? - நான் அனைத்தும் பறித்து எறிந்ததாய் குற்றவுணர்வு எனக்குள்! உன்னோடான என் நாட்கள்  உனக்கு எப்படியோ.... பட்டாம்பூச்சியாய் மாறிப்போனேன் நான் என்னுள் பல்லாயிரம் மின்மினிகளின் பிரகாச ஒளி வீச்சு  பார்க்கும் திசையெல்லாம் உன் விம்பம் ...

நம்பிக்கை இல்லை

காயப்படுத்தி கடந்த பின்  மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடும்  என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை  எதுவும் இல்லை என்றானபின்  ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அனுதாப காதல் பொழிய விருப்பமும் இல்லை விரும்பிய ஒன்றை  விருப்பமில்லாமல் தொலைப்பதை விட வலி  வேறென்ன இருக்க முடியும் ஏதோ சந்தித்தோம்  காதல் செய்தோம்  காத்திருந்தோம் - காலத்தால் பிரிந்தோம் என்பதாகவா  நம் காதல் இருந்தது  எனக்கு உன்னையும்  உனக்கு என்னையும்  பிடித்ததற்கு இது தான் காரணம்  என நம்மாலே கண்டறிய முடியுமா? எனை கடக்கும் அத்தனையும் நீயாக உனை கடக்கும் எல்லாமே நானாக உருகி உருகி காதல் செய்து இயலாமையில் தொலைக்கவில்லை என் காதலை - உன் முயலாமையால் மட்டுமே என் முடிவுரையை நானாக எழுதிக்கொண்டேன் உன்னுள் வீரிட்ட வலி - எனக்கு  மட்டும் இல்லாமலா இருந்திருக்கும் எத்தனை வழிகளோடு  அத்தனை துணிந்திருப்பேன் எல்லாம் உன்னால் தான் என மொத்த பழியையும் உன்மீது திணித்து உத்தமியாக ஒருபோதும் எண்ணமில்லை என்ன நான் இன்னும்  கொஞ்சம் பொருத்திருக்கலாம் உன்னை கொஞ்சம் புரிந்திருக்கலாம் இப்படியாக,...

சிறகு விரியுமா?

எதுவாக வேண்டுமானால்  இருந்துவிட்டு போ  யாரோடு வேண்டுமானால் இருந்துவிட்டு போ என் மீதான காதலை  எனக்கு மட்டுமே பத்திரப்படுத்தி வை அது போதும் எனக்கு திகட்ட திகட்ட அன்பை தந்ததால் தானோ நீ என்னை சட்டை செய்யவும் இல்லை என்னோடு சண்டை போடவும் இல்லை உன்னை விட்டுச்செல்ல துளி எண்ணமும் இருந்ததில்லை உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க துணிவும் இருந்ததில்லை என்னை கண்டுகொள்ளாத கோபத்தில் உனக்கு என் காதலை உணர்த்தும் நோக்கத்தில் ஏதேதோ செய்து தொலைத்தேன் அப்போதும் நீ வரவே இல்லை தனித்து விடப்பட்டு தத்தளித்தே போனேன் என்னவனே! என் முட்டாள்தனம் எண்ணி என்னையே நொந்துகொள்கின்றேன் இன்று மனமுறுகி மண்டியிட்டு கேட்கின்றேன் மன்னிப்பாயா என்னை? மீண்டும் ஒரு முறை உன் காதல் வானில் என் சிறகுகள் விரிக்க இடம் தருவாயா?

காலம் கடந்தும் காதல்

ஏனோ என் காதல் மீது அத்தனை பிரியம் எனக்கு -அது இனம்புரியாத உணர்வை தந்துவிட்டு போகும் வெளியில் இருந்து பார்க்க எல்லாமே நன்றாக தான் தோன்றும் ஒருவருடனான ஆழ்ந்த உரையாடல் அதன் பின்னான நீண்ட மௌனம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வலி... ஒரு ஏக்கம்... ஒரு இழப்பு... இருக்கத்தான் செய்யும் என்பதை புரியவைக்கும் எல்லா வாழ்வும் இனிமையாய் மட்டும் இருந்திடாது அப்படி இருந்தால் சில அற்புதங்களின் அருமை புரிந்திடாது சில இழப்புக்கள் ஏன் நிகழ்ந்ததென்று கிரகித்து முடிப்பதற்குள்  எல்லாம் முடிந்தே போய்விடும் - முழுதாய் தொலைந்தே போய்விடும் இங்கு யார் யாரை குற்றம் சொல்ல... வாழப்போவதை பற்றி பேசவே நேரம் கிட்டாத போது பிரிவைப்பற்றி சிந்தித்திருக்கவா போகிறோம் காலம் நம் காதலையும் விட்டு வைக்கவில்லை காலம் கடத்தியே காதலை கொன்றுவிட்டது இருந்தும், ஏனோ என் காதல் மீது அத்தனை பிரியம் எனக்கு -அது இனம்புரியாத உணர்வை தந்துவிட்டு போகும்!

மடல் ரசிகை

 மடல் காதல் தாண்டி  இப்போது தான்  அலைபேசி உலகுக்குள்  காலடி வைக்கிறது என் காதல்! இந்த உலகம் அழகாகத்தான் உள்ளது இருந்தும் எனக்கென்னவோ வரிகளுக்குள்ள சக்தி  வார்த்தைகளில் அவ்வளவாக இல்லை என்றே தோன்றும்! வேக உலகம் ஏனோ அதற்கு முழுதாக  மாறிப்போய்தான் உள்ளது நாம் மட்டும் என்ன விதிவிலக்கா? எதுவும் இல்லையென்றானபின் -பெரிதாக  எதை கேட்டுவிடப்போகின்றது மனசு கொஞ்ச நேரமாவது என்னிடம் பேசிவிட்டு போ என்பதை தவிர! என்றாவது உனக்கு  நேரம் கிடைத்தால்  எனக்காக இரு வரிகளையாவது எழுதிவிட்டுப்போ - நான் உன் வரிகளின் ரசிகை!

தொலைந்த நான்

அது ஒன்றும் காதல் செய்யும் வயதில்லை  உன்னை நானும்  என்னை நீயும்  புதிதாக அறிமுகம் செய்ய  அவசியமும் இருக்கவில்லை  என் மீது உனக்கு எதனால் காதல்  காரணம் நானாறியேன் நான் அறிந்ததெல்லாம் உன்னை காதல் செய்ய மட்டுமே உன்னை நேசிக்க  ஆயிரம் காரணம் இருந்தது எனக்கு ஒவ்வொன்றாய் சொல்லி முடியாது முழுதாய் பிடிக்கும் உன்னை உன் கண்ணியமான பேச்சு நீ என்னை நடத்தும் விதம் உன் சிரிப்பு உன் பார்வை உன் வெட்கம் என எல்லாமே பிடிக்கும் அனைத்தையும் அணுவணுவாய் இரசித்திருக்கின்றேன் மாறாக,  உன் நேரத்தில் கொஞ்சம் எனக்கும் தா  என கேட்டேன் என்னை ஒருமுறையாவது வந்து பார் என கெஞ்சியிருக்கிறேன் இவை ஒன்றும் வேண்டாம்,  "நன்றாக இருக்கின்றாயா? உனக்காக நான் இருக்கின்றேன்" என்ற ஒற்றை வரி கவிதை மட்டுமாவது தருவாய் என காத்துக்கிடந்தேன் நீ தான் வரவே இல்லை நான் தூரமாய் தொலை தூரமாய் தொலைந்தே போனேன்

நீயும் நினைவும்

உன் விழியா? மொழியா? எது எனை உன்னில் விழ வைத்தது  இன்றும் புரியாமல் தடுமாறும் நெஞ்சம் என்றாலும் உன் விழி என் இதயத்தை  அவ்வப்போது உரசிச்செல்லும் வரிகள் என் இதயத்தை அடிக்கடி நனைத்துவிடும் உன் வரிகளுக்கு மட்டும் எனை அடக்கியாலும்  அத்தனை சக்தி எங்கிருந்து வந்தது? ஒரே மடலை ஓராயிரம் முறை படித்தாலும் சலிக்காது எனக்கு உன்னை சார்ந்த எதை, யாரை கண்டாலும் மனதுக்குள் அத்தனை பூரிப்பு தான் ஏன்? உன்னை ஒரு நொடி காணவென்று கால்கடுக்க நின்று,  நீ வராததால் கோபத்தில் சிவக்கும் என் முகம் உனை கண்ட மறுநொடி நாணத்தில் குனியும் எல்லாமே இன்றும் பசுமையாக நிழல்படமாய் வந்து வந்து போகும் ஏனோ நீ மட்டும் அன்று போல்  இன்றும் எட்டா தூரமாய்?

மழை காதல்

நான் எதிர்பாராத போது  பொழிந்த காதல் மழை  ஏங்கித்தவித்த போது தூரலாகக்கூட  எனைத்தீண்ட வில்லை  என்றாவது பெய்யும் மழை  மண்வாசணையை எப்படியாவது நுகர்ந்து விடலாம் என்ற ஆசை,  நிராசையானது மட்டும்தான் மிச்சம்   தீயாய் சுடும் வெயிலில் வெந்து வெப்பம் தாங்காமல் கிணற்றுத்தவளையாய் மாறிப்போனபின் இன்று, அடைமழை எனை நனைக்கிறது குடை பிடிக்கவும் முடியாமல் முழுதாய் நனையவும் வழி இல்லாமல் சீக்கித்தவிக்குது மனசு - மீண்டும் உனை இழக்கும் துணிவில்லாததால்!

உலகுள்ளவரை காதல்

க ண்டுகொள்ளாத அவன்மீது காலம் கடந்தும் எதற்காக இத்தனை காதலும் கோபமும்? வெளி வரும் கண்ணீர் அவன் மீதான என் காதலை எனக்கு உணர்த்தி செல்கிறது. அன்பை காட்டவோ,  அரவணைக்கவோ ஆளில்லா போதும்  சாய்ந்து கொள்ள  தேடியதென்னவோ  அவன் தோள்களைத்தான் என் எல்லா வலிகளையும்    ஒரு நொடியில்  தீர்க்கும் மருந்து  அவன் வரிகள் அவனுக்கு மட்டுமல்ல,  அவன் வரிகளுக்கும் - நான்  அடிமையாகித்தான் போனேன் எல்லாம் கிடக்கட்டும் உன்னிடம் எந்த எதிர்பார்ப்போடும் பழகியதில்லை நான் - உன் அன்பை தவிர இதனை என் கடைசி ஆசையாகவேணும் நினைத்துக்கொள்... ஒரு வேளை,  ஓரிரு தினங்களுக்கு மேலாகவும்  என்னிடம் இருந்து  அழைப்பெதுவும்  வரவில்லை என்றால்  நீயாக உணர்ந்து கொள்  மீண்டு வரமுடியாத தூரத்தில்  ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருப்பேனென்று - அப்போதும் உன்மீதான காதல் மட்டும்  உயிரோடே இருக்கும்.

தீராக்காதல்

அலட்சியம் செய்யப்பட்ட  அந்த காதலின் மீது  ஏன் எனக்கு இன்றும்  தீராத காதல்? நீ என்னை தவிர்ப்பதும்  பின் மறந்துவிட்டேன் என  சிறு புன்னகையால் மறைப்பதும்  பழகிப்போன தொடர்கதை! உன் வருகைக்காக  மணிக்கணக்கில் தரிப்பிடத்தில்  காத்திருந்து நீ இல்லாத வலியில்  கடக்கும் போது,  உன்னை காணும் என் கண்களுக்கு  அத்தனை பூரிப்பு! உன்னோடு அதிகமாக  பேசிக்கொண்டதும் இல்லை  உரசல்களோ, அணைப்போ  அவசியப்படவும் இல்லை  நம் கண்கள் மட்டுமே அன்பை பரிமாறிக்கொள்ளும்  ஆயிரம் கவிதைகளால்! எனக்குள் காதல் விதையை  விதைத்து விட்டு  அது விருட்சமானதும்  விலகி சென்றுவிட்டாய் -  ஆழமாய் வேரூன்றி  அகல பரந்து விரிந்த கிளைகளை  வெட்டி சாய்ப்பதொன்றும்  அத்தனை சுலபமில்லை! என் காதலை உனையன்றி யாரறிவார்?