Posts

Showing posts from May, 2010

இதயத் திருடி

உன் நினைவுகளில் தெப்பமாய் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் என்னைப்பார்த்து.... இதயக் கதவுகள் வழி மெதுவாய் எட்டிப்பார்த்து உனக்காய் ஒரு கவிதை சொல்ல சொல்கின்றாய்; கடைக் கண்ணால் கண்சிமிட்டி என்னில் கொலைகள் பல செய்து விட்டு.... இதயவறை உள் நுழைந்து இம்சைகளை செய்து கொண்டு கொடூர கொலைகாரன் என குற்றம் சாட்டுகின்றாய் என்னை இப்படி இடைவிடாமல் அன்பால் என்னை நீ முழுதாய் ஆக்கிரமிப்பு செய்த பின்னும் இதயத்தைக் கைப்பற்றி உன் சிறைவாசல் கைதியாக்கி எனை அணுவணுவாய் வதைத்துக் கொண்டு... திருடன் என்கின்றாய் நீ என்னை.....; நீயல்லோ என் நினைவான இனிய இதயத்திருடி!

என்றுதான் மாறும்???

இரவோடும் பகலோடும் இதயங்கள் ஏங்கும் இமை மெல்ல தாழும் இன்னிசை வீழும் ஏக்கங்கள் சேரும் தாக்கங்கள் கூடும் வாட்டத்தில் மூழ்கும் மனம் வாடியே சாகும் நிமிடங்கள் நீளும் வருசங்கள் ஆகும் உடலெங்கும் ஏறும் உன் அகமாக தேடும் விடியலை நாடும் விலகலில் தேடும் மௌனமாய் பாடும் மனதோடு ஆடும் என்று நினைவோடே தொடரும் காலம் என்றுதான் மாறும்???

தொடரும் தொடர்கள்

Image
நீண்ட இடைவெளி நீண்டபடி மீளாத நினைவுகள் வலிகளோடு வாழ்ந்த நாட்கள் வாடி வாடி மாண்ட நொடிகள்.. கண தூர நடைக்குப் பி ன் கரை தொட்ட அலையென தொலைவாய் இருந்த போதும் அணைத்துக் கொள்ளும் அவ்வப்போது.. எச்சங்களின் மிச்சமாய் கடந்து போண கசப்பான நிகழ்வுகள் சலைக்காமல் சலனம் செய்கின்றது மனதை.. உரிமையோடு அவை உணர்வை சல்லடையாய் சலித்தும் வைக்கின்றது உப்பிட்டும் ஒப்பிட்டும்.. இவை தானே தீராப்பளுவாய் தொடர்கதை எழுதிவிட நிலைமாறி நினை மறந்து காய்ந்த மரமாக மனசு.. இன்பத்தின் இமயம் மௌனத்தோடு போர்த்தொடுக்க இறுதியில்; தனிமை யின் கொடுமை தவத்தின் வரமானது!