Posts

Showing posts from July, 2010

என்னால் இன்னும் முடியும்

Image
பல முறை இதயட்தைக் குத்திக் கிழித்தும் கிழித்ததை ஒட்டியும் ஆறுதல் சேர்க்கிறாய் நீ கிழித்த தழும்புகள் தடயமாக என்னில்! மடி மீது சுமந்த ஒன்று மார்த் தேடி தவித்தல் கண்டும் மாரோடு பால் கன்றிய கொடிய வலி உள்ளுக்குள் பிசைகிறது மரணத்தில் உயிர்க்கும் மறு ஜென்ம தாயாய் நான்! அர்த்தமே இல்லாமல் அர்த்தப்படுத்துவதும் - கேள்விக் கணைகளால் அடிக்கடி துளைத்தெடுப்பதும் வழக்கமாகிப் போனது அசையும் மரத்தில் தொங்கும் காய்ந்த சருகாய் மனசு! தெரிந்தே விழுந்து எழுந்ததில் விடியா விடியலை வெம்பும் மனதி ன் வடியும் கண்ணீர் வற்றியபாடின்றி மீண்டும் மீண்டும் சுரக்கிறது நாளை நீ தரும் வலிகளை நான் தாங்கிக்கொள்ளும் வலிமைப் பெறவே!

வாழ்க்கைப் பிச்சையா?

உன்னிலும் நான் வித்தியாசமானவள் ஒவ்வொரு முறை நீ சொல்லும்போதும் உள்ளுக்குள் ஏதோ நெருடும்! மனதினை தீண்டும் வலி இருந்தாலும் உள் ஆழம் புதைந்து உணர்ந்ததில்லை அதன் அர்த்தத்தை! ஏனோ முழு நம்பிக்கைக் கொண்ட மூடச்சியாய் எனையும் சுமந்து கொண்டே காற்றாய் கரைந்தது காலம்! என் நிலை தளர்ந்து உன்னடி சேர்வை உணர்ந்து ஓட விடுகிறாய் நீயும் மூச்சு முட்டும் மட்டும்! தேடித் தேடித் தொலைந்ததில் இன்று வரை நீ தரும் காயங்களால் நொந்து நூலாய் ஜெஞ்சம்! நீ பாவப்பட்டு எனை சேர அப்படி நான் என்ன உன்னிடம் வாழ்க்கைப் பிச்சையா கேட்டேன்?

நீயே என் கவிதை

தினம் வந்து மயக்கும் உன் அழகில் - மனசு மழலையாகிப் போகிறது! எனை வந்து வதைக்கும் உன் நினைப்பில் - நினைப்பு குழந்தையாகிப் போகிறது! மௌன மொழிகளில் நீ பேச - என்னில் ஆயிரம் வார்த்தைகளின் அரங்கேற்றம்! கண்களின் ஸ்பரிசத்தால் நீ தீண்ட - சொர்க்கத்தில் உற்சாக பானம் எனக்கு! கவிதை கருவாக நீ மாற; மெய் வந்து என்னை மொய்த்துக் கொள்கிறது! கவிதைக்கு பொய் அழகு காலத்தின் கருத்து - நொடியில் பொய்யாகிப் போகின்றது! ** நீயே என் கவிதை**