Posts

Showing posts from January, 2010

திருப்பிக் கொடு

உன்னைக் கண்ட நாள் தொட்டு உள்ளத்துடிப்பு பல மடங்காய் இரத்த நாடியில் ஏதோ பிசைய "சுர்" என்று ஏதோ உடலெங்கும் பரவியது இன்ப ஊற்று இரட்டிப்பாகி உணர்வெல்லாம் உன் நி னைவு சூடிக்கொள்ள சிறகு முளைத்த பறவையாய் என் மனசு ஆனது இடைக்கிடை இதயம் தொட்டுச் சென்ற நீ இன்று என் இரவுகளை மொத்தமாய் விழுங்கிச் செல்கின்றாய் இரவோடு இரவாகி என் இரவுகளைத் தொலைத்தப் பின்னும் விடியலிலும் உனையே தேடித் துடிக்கின்றேன் இப்பொழுதெல்லாம் நான் உன்னை நினைப்பதே இல்லை - ஏனோ இதயம் தான் ஏங்கி அழுகின்றது நி தம் உந்தன் தரிசனம் வேண்டி இரவுகளின் சாரல் தனலாக விடியலின் தூரல் குளிராக மனதினில் நீயும் மலராக மௌனத்தால் நானும் சிலையாக மனதினில் மாற்றம் தந்தாயே இதயத்தை இடம் மாற்றிச் சென்றாயே இன்று நீ யே நானாய் ஆனேன் ந ிலவாய் பாதி தேய்ந்தேன் உன்னில் என்னை விளக்கிவிடு உறவே என்னை மறந்துவிடு உலகில் நா னாய் வாழ்வதற்கு என்னை எனக்கே தந்துவிடு!

வழி பிறக்குமா.... வலி பிறக்குமா....?

தைப்பிறந்தால் வழி பிறக்கும் மூத்தோரின் முன்னுரைகள் தையினிலே தலை வெடிக்கும் தமிழனின் நிலை இது தான் ஏழையின் கையது தான் கடவுளென தினம் துதிப்பர் ஆட்சியிலே அமர்ந்த பின்பு சீ போனு தான் வதைப்பர் ஒரே நாடு ஒரே வீடு ஊரெல்லாம் மைக் பிடிப்பு உள்ள வீடும் சுருட்டிக் கொண்டு உலகத்திலே பெரும் நடிப்பு கைப் பிடித்து மை இடுவர் கண நேரம் பேசிடுவர் கால் பிடிக்க வைத்திடுவர் அடிமை இந்த தமிழனென்று நாட்டின் குடிமகன் குடிகார மகனாக - நாள் தோறும் ஊற்றிடுவர் வஞ்ச புத்தியோடே நஞ்சை மருந்தாக பட்டு நொந்ததிலே பலர்....... தமிழரின் எதிர்கால விற்பனைக்கு தாமே தயாராக - இன்று சிரம் தாழ்த்தி பழகி விட்டார் சில காலம் வாழ ஆசை நாளெல்லாம் துடித்திடுவர் நல்லவன் ஜெயிக்கவென - ஏனோ நாளை உழைக்காட்டா நம் வீட்டு அடுப்பணையும் தேர்ந்தெடுக்க உரிமையுண்டு தெளிவாக கூறிடுவர் தெரிந்த பின்னே சொல்லிடுவர் தெரியாது உன்னை என்று கோழியிடம் தப்பிக்க காகத்திடம் சென்ற புழு யாரிடம் சென்றாலென்ன புழுவின் கதை முடிந்த கதை நிறத்தில் மட்டும் மாற்றமுண்டு குணத்திலல்ல என்றுணர புழுவிற்கு நேரமில்லை புதைந்தது அதன் வாழ்வு என்றாலும் மாற்றமில்லை மறுபடியும் சிசு புழு -

முடிவு

Image
கரைந்திட்ட காலமது அலையாக நுரைக்க அடிமனதின் ஆசைகளோ ஆயிரமாய் வளர... இதயத்திலே சலனம் இடைவிடாமல் உரச இலக்கில்லாத பயணம் இறுதி வரை தொடர... கனவினிலே வாழ்வு காலை மாலை துளிர நினைவுகளைச் சுமந்தே நிகழ்வுகளும் மிளிர... எல்லைகளை கடந்த பாதை இதயத்திலே உதிக்க தொடங்கிவிட்ட முடிவை நோக்கி பல கேள்விகளும் படர... இருப்பில்லாத வாழ்வில் உன் இருப்பை தேடிய நெஞ்சம் அதன் இழப்புக்கள் ஏற்று இறப்பா னது தஞ்சம்!

பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்

மாட்டுப் பொங்கல் தினத்தில் பதிவர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் ஸ்ரேயா மாட்டுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்திருக்கின்றார்கள் இதோ உங்களுக்காக அன்று கலந்து கொண்ட பதிவர்கள் சிலரது முயற்சி ( ஸ்ரேயா என்பது பதிவர்கள் மாட்டுக்கு வைத்திருந்த செல்லப் பெயராம் என்பது தீர விசாரித்ததில் தெளிவானது ) தைத் திரு நாளை இனிதே கொண்டாடி மகிழ்ந்த களிப்போடே இன்று மாட்டுப் பொங்கலைப் பதிவர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நல்ல நாளிலே முதலாவதாக நானே ஸ்ரேயாவிற்கு பொங்கல் ஊட்டி தொடங்கி வைக்கலாம் என நினைக்கின்றேன் . பதிவர்களே உங்கள் கரகோசம் வானை முட்டட்டும் . " உனக்கு பொங்கல் ஊட்டி மகிழ்விப்பதற்காக பொடி லோஷன் போதாதென்று என் மகனுக்கு வாங்கி வைத்திருந்த பேபி லோஷனையும் பூசிக் கொண்டு வந்திருக்கின்றேன் கொஞ்சமாவது சாப்பிட்டு விடு ..... மேலும் பொங்கல் ஊட்டி உன்னை கௌரவிப்பதற்காக பதிவர்கள் தயாராகக் காத்திருக்கின்றார்கள் அத்தோடு நான் விடைப்பெற வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது ... எனவே மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தினத்தில் உன்ன

என்றென்றும் நீ வேண்டும்

உயிரையே பிழிந்து எடுத்த பின்னும் இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன் தினம் தினம் அப்படி என்னத்தான் இருக்கிறது உன்னிடம் என்னை ஏங்க வைத்து சாகடிக்கிறாய் ஏமாற்றங்களால் நோகடிக்கின்றாய் என்றாலும் என்றும் சுகமான சுமையாய் என் வாழ்வில் நீ வேண்டும். வாழ்க்கையை சுவைத்து விட வாட்டத்தை துடைத்து விட மாற்றானாய் நீ வேண்டாம் மன்னவனாய் நீ வேண்டும் சின்ன சின்ன சந்தோசங்கள் வேண்டும் உன் சில்மிஷங்களும் வேண்டும் துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு துணையாய் நீ மட்டும் வேண்டும். சலிக்காத உன் பேச்சு வேண்டும் சங்கமமாக நீ வேண்டும் பூவைப்போல ஒரு வாழ்க்கைக்கு உயிர் தர நீ வேண்டும் என்னை ஏங்க வைத்து சாகடிக்கிறாய் ஏமாற்றங்களால் நோகடிக்கின்றாய் என்றாலும் என்றும் சுகமான சுமையாய் என் வாழ்வில் நீ வேண்டும்.

சுவாசமே நட்பாய்

ஆழப்பதிந்த ஈட்டியின் தழும்பாய் உன் நட்பு என் இதயத்தில் ! மீட்டிப்பார்க்கும் போதெல்லாம் அத்தனையும் பசுமையான நினைவுகளாய் நெஞ்சில் ! அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்த என் எண்ணங்களின் சேர்க்கை உருவாய் நீ ! சில காலம் சேர்ந்திருந்தும் பல காலம் பிரிந்திருந்தும் பாசத்தின் ஊற்றல்லோ நீ ! வேசமில்லா வரமல்லோ வாசமுள்ள மலரல்லோ என்றும் வாடாத உன் நட்பு ! நேசத்தின் உறவதாம் நெஞ்சத்தின் துணையதாம் என்றென்றும் உன் நட்பு ! காலமும் நிலைக்குமாம் காத்திருந்தும் தொடருமாம் சுவாசமே உன் நட்பாய் !

மனித உரிமை மீறல்களும் தனிமனித கடப்பாடுகளும்

மனித உரிமை மீறல்கள் என ஆங்காங்கே செய்திகள் வெளியாகின்றன என்ற போதும் நம்மில் பலருக்கு அது குறித்ததான தகவல்கள் பூரணமாக தெரிந்திருப்பதில்லை. சிலர் அதனை தெரிந்து கொள்ள விரும்புபவர்களாகவும் இல்லை. இப்படியான ஒரு நிலையில் நமது சமூகம் காலத்தை கடந்து கொண்டிருக்கும் போது அசம்பாவிதங்களின் அதிகரிப்பில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழும் காலத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதின் மகத்துவத்தையும் உணர்ந்து செயற்படும் போது மாத்திரமே அகிம்சையோடானதொரு உலகை காண முடியும். மனித உரிமை என நாம் எதனை கூறுகின்றோம் யாராலும் உருவாக்கப்படாததும், எவராலும் வழங்கப்படாததுமான மனிதனுக்கு கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை. அத்துமீறிய பறிப்புக்கள் தண்டனைக்குறிய குற்றம் என என்ன தான் வார்த்தைக்கு வார்த்தை வாய் கிழிய பேசினாலும், இன்றைக்கு இலங்கை சுதந்திரமடைந்து 61 வருடங்களின் பூர்த்தியைக் கண்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் இங்கே தனி மனித சுதந்திரமென்பது எந்த நிலையில் உள்ளது என்பது நாம் அனைவரு