Posts

Showing posts from August, 2009

65. உலகைக் காண

Image
கவிதை அவள் கருங்கூந்தல் காற்றினிலாட - காளை இவன் மனமுமல்லோ ஆடியது சேர்ந்து........; வெட்ட வெட்ட வளருகின்ற விரல் நகம் போல வளருதிங்கே அவள் மீது இவனின் ஆசை.......; அவள் விழி இரண்டும் விண்மீனாய் விந்தைகள் செய்ய பரவசத்தில் பரிதலித்தது - இவன் பார்வையுமன்றோ.......; இளையவளின் இனிய முகம் இதமென இருக்க, இனிமைகளை பாடி அவள் அவனுயிர் மீட்ட, கரம் நீட்டி கை கோர்த்து காதல் செய்யும் வானம்பாடிகள் அவை இதயங்கள் கானம்பாடிகளாய் சிறகுகள் விரிக்க......., உணர்வுகளில் ஒன்றாகி உருவங்களை தனதாக்கி உயிராக உறவாடின உல்லாச பூமியிலே உலகைக் காண!

64. நடப்பு

Image
அனாதையாய் நிற்கும் உறவுகளுக்கு ஆதரவு தருவதாய் பல குரல்கள் பந்தங்களையும் பாசங்களையும் தொலைத்து நிற்கும் உனக்கு துணையாய் நான் என எத்தனை வார்த்தை துப்பல்கள் வித விதமான தொணியில் வித விதமான வரியில் வித விதமான மொழியில் ஏனோ உங்கள் வார்த்தையில் உள்ள தெளிவும் உறுதியும் உங்கள் செயல்களில் இல்லை அவர்கள் பாதுகாப்பாக சகல வசதிகளோடும் எத்தனை செய்திகள் உங்களிடமிருந்து என்னினம் வாழ நீ அளித்த இருப்பிடத்தின் பெயர் என்ன அற்புத தேசமா? இல்லையே அகதி முகாம்கள் தானே இப்போதெல்லாம் எங்கள் பெயரின் முதற் பெயர் சொல்லப்படுகின்றதோ இல்லையோ முன்னதாக சொல்லப்படுகின்றது ”அகதி” என்று அகதி.... இந்த வார்த்தைக்குள் எங்கள் வாழ்க்கையை அடக்கி வைக்க யார் நீ? பிஞ்சு முதல் கிழம் வரை பிழிந்து எடுக்கின்றாய் உயிரை உயிரின் உன்னதம் தெரியுமா உனக்கு? எதற்காக இந்த கொடுமை எங்களுக்கு? நாங்கள் கேட்டது எங்கள் தாயைத் தானே தாய் தேசத்தைத் தானே உங்களால் முடியுமா ஒரு பொழுது ஜீவிக்க நீங்கள் வழங்கிய நரக தேசத்தில்? உன் பிள்ளைகளை ஓரிரவு துயிலவிட முடியுமா? நாங்கள் என்ன ஒன்றும் இல்லா

63. இயல்பு வாழ்க்கை

எத்தனை நாளிகைகள்..... உயிரோடு உலா வருவது? நாளை நானும், நீயும் மூச்சை நிறுத்திக்கொண்டால் நமக்கான பொதுப் பெயர் ஒன்றுதானே.....! போதுமடா சாமி இந்த வாழ்க்கை என நிறுத்திக்கொள்கின்றோம் சுவாசிப்பதை; எம் நிறுத்தத்திற்காக தன் சுவாசத்தை நிறுத்திக்கொள்ள எத்தனை உயிர்கள்? மிஞ்சிப்போனால் மூன்று நாட்கள் முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் கூட்டம் நாம் செய்ததை இல்லையென்றும் செய்யாததை செய்ததாயும் கூறும் செத்து போனவன் திரும்பவா போகின்றான் என்ற நினைப்பில் நிறுத்தப்பட்ட என் அசைவிற்காய் நின்றுவிடவா போகின்றது புவியின் சுழற்சி? காலையில் ஆதவனின் அழகிய சிரிப்பு துகில்கள் பறவைகளின் கீச்சிடல் பச்சை குழந்தைகளின் பாட்டிசைப்பு என எல்லாம் வழமை போலவே நடக்கத்தான் போகின்றது தென்றலின் தீண்டல் தீண்டிவிட்டுப் போகும் என்னையும் தான் ஏனோ அந்த வருடலை உணராமல் உணர்ச்சியற்று கிடப்பேன் நான்! இப்போது தானே ஜடம் என சொல்ல வேண்டும் என்னை; ஏன் அடிக்கடி அம்மா திட்டுவார் ஜடமென? ஒன்று இரண்டென மாதங்கள் உருண்டோட நிஜத்தில் உலாவந்த என்னை நிழற்பிரதியாய் மாட்டிவிடும் சொந்தங்கள் இவை எ

62. இலங்கைப் பதிவர்களின் இனிய ஒன்றுகூடல் 2009

Image
ஒன்றுகூடல் என்றாலே அதில் ஒரு இன்பம் அதிலும் ஒரே அரங்கில் இலங்கையின் வலைப்பதிவர்கள் அனைவரையும் சந்திப்பதென்றால் சும்மாவா? அப்பப்பா.... எத்தனை பரபரப்பு..... எத்தனை நெகிழ்ச்சி........ இலங்கையின் வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முற்றிலும் வேறுபட்ட ஒரு சிறந்த எதிர்கால வலையுலக சந்ததியை உருவாக்கும் நோக்குடன் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் “இலங்கைப் பதிவர்களின் இனிய ஒன்றுகூடல்” 80க்கும் மேற்பட்ட நட்பின் உள்ளங்களுடன் இனிதே ஆரம்பமானது. இந்நிகழ்வின் முதலாவது அம்சமாகவும், வலையுலகின் 10வது ஆண்டை சிறப்பிக்கும் முகமாகவும் எம் வலையுலக நணபர்கள், மூத்தோர் தலைமையில் கேக் வெட்டி தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷேட சில உரைகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் என்னை போன்று தூங்கிக் கொண்டிருந்த சிலரை மீள நிகழ்விற்கு கொண்டுவரும் பொருட்டு வடை, கோப்பியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களுடன் அரங்கம் களைகட்டியது. கருத்துப் பகிர்வுகள் என்றாலே கருத்து முரண்பாடுகள் இல்லாமலா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புக்களும் இங்கே து

61. LOVE

Image
OH!!!!!!! My LOVE…..; Our Hearts Always beat as one Yes! I know that, Our Minds always think as one Yes! I know that, You are my world Yes! I Love to say that, A special world for me is you…. I would wish to be with you forever Be yours forever I could not find that, Where we belong, where our love belongs………..? Yes! I knew that, I could never meet anyone like you…! I love the way you wake I love the way you smile I love the way you look I love the way you breathe I love the way you walk I love the way you eat I love the way you see I love the way you dance I love the way you sleep Dear….! Love the way as me I am so Proud of me Because; I have choose a correct Love I love you with my Heart! You are my World, Body, Soal... Yes! You are ME You are my forever music You are mine I will Love you with my heart forever I LOVE YOU

60. தமிழ்

எண்ணி எண்ணி எழுதி வைத்து என் மொழியில் சொல்ல வந்தேன் தாய் மொழியாம் தமிழதனை போற்றி விட நினைத்ததனால்! பொக்கிஷமாய் காத்து வந்த பொன் மொழியும் தமிழல்லவா? - நம் தாயைப் போல காத்துக் கொள்ள தமிழதுவும் துணை எமக்கு! தமிழைப் போல சிறந்ததொரு நல் மொழியும் நானறியேன் தரணியிலே நானறிந்த சிறந்த மொழி தமிழதனால்! உவகையோடு உறைந்து விட உன்னதமே தமிழல்லவா? உள்ளத்தையே கொள்ளை கொள்ளும் உருவகமும் தமிழல்லவா? கண் திறந்த முதல் தினமே கண்ணுற்றது தமிழல்லவா? களி கொள்ளும் கருத்துக்களை கொண்டதுவும் தமிழல்லவா? பேசப் பேச இனித்து நிற்கும் பெருமையுள்ளது தமிழுக்கே பேச்சைக் கொண்டே ஆட்சிக் கொள்ளும் பேரன்பும் தமிழுக்கே! சொல்ல சொல்ல சோர்வு கொள்ளா சொரூப மொழி தமிழல்லவா சொல்லிக் கொண்டே போவதற்கு ஏற்றதுவும் தமிழல்லவா? தமிழுக்குள் வாழ்ந்து விட புண்ணியமும் நான் பெற்றேன் என்றபோதும், மடிப்பிச்சை வேண்டுகின்றேன் செந்தமிழில் கதைப்பேசும் தமிழச்சியாய் மறுபடியும் நான் உதிக்க!

59. காதல்

நான்கு கண்களின் பிடித்தல் நான்கு கண்களின் ஒப்பந்தம் நான்கு கண்களின் தொடுகை நான்கு கண்களின் உரசல் நான்கு கண்களின் மௌனம் நான்கு கண்களின் அணைப்பு நான்கு கண்களின் மோதல் நான்கு கண்களின் விழிப்பு நான்கு கண்களின் மயக்கம் நான்கு கண்களின் உறக்கம் நான்கு கண்களின் உணர்வு நான்கு கண்களின் இதயம்

58. காதலுக்குள் கருகிய காதல்

தொலைப்பேசி சிணுங்களுக்காய் அலைப்பாயும் மனதை அன்றும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..... மனதுக்குள் மலர்ந்த காதல் அரும்பை நீர் கொண்டு வளர்க்கவில்லை மலர்விழி தன் உதிரத்தாலல்லா அபிஷேகம் செய்கின்றாள் மலர்விழி என்ற பெயரைக் கொண்டதாலோ, என்னவோ பார்ப்பவரை மீண்டும் பார்க்கத் தூண்டும் மலரை விட மென்மையாகவும் வசீகரமாகவும் காணப்பட்டாள் சிற்றிடையாலின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது - ஆம் வழமை போலவே குறித்த தருணத்தில் அவள் வீட்டு தொல்லைப்பேசி அவள் அம்மா... தொலைப்பேசியை அழைப்பது அவ்வாறே ரீங்காரமிட்டது அழைத்திருந்தவன் சஞ்சய் தான் வழமை போலவே தனக்கே உரித்தான அன்பு வார்த்தைகள் கொண்டு ஸ்பரிசித்தான் அவள் இதயத்தை இந்த வார்த்தைத் தீண்டலுக்காகத் தானே நிமிடங்களின் நீளத்தொடல் நேரத்தை விநாடிக்கு விநாடி கணக்கிட்டுப் பார்க்கின்றாள் அவளுக்குள் சிறகடித்த ஆனந்தப் பறவை ஆகாயத்தை தாண்டி வட்டமிட்டது சிட்டாய் அவள் அழகு விழிகள் அன்றும் கதைப் பேசின அன்பாய் அன்போடு தன் இதயச் சிறைக்குள் பூட்டி வைத்த காதல் அரும்பை சுதந்திரமாய் பறக்கவிட முனைந்த மலர்விழி முதன்மு

57. கவிதை

உனைக் கொண்டு உனக்கூடாக வர்ணிக்கின்றார்கள் அவர்கள் இஸ்டத்திற்கு உழைப்பாளி முதல் உதவாக்கரை வரை! உனைக் கொண்டு உனக்கூடாக வர்ணிக்கின்றார்கள் அவர்கள் இஸ்டத்திற்கு ஆதி முதல் அந்தம் வரை! உனைக் கொண்டு உனக்கூடாக வர்ணிக்கின்றார்கள் அவர்கள் இஸ்டத்திற்கு உள்ளது முதல் இல்லாதது வரை! ஏனோ........ உனை மட்டும் கண்டு கொள்வதே இல்லை இவர்கள்! உன் தனித்தன்மை கண்டு மெய் சிலிர்த்து நிற்கின்றேன் பல தருணங்களில்! உனக்குள் உள்ள உன்னதமான கருத்துத் தெளிவு ஊக்கப்படுத்துகின்றது! இன்று நானோ உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடிவிட்டேன் தேடிக்கொண்டிருக்கின்றேன், ஏனோ...... எனக்கு கிடைத்தப்பாடில்லை! உன்னை வர்ணிக்க பிரபஞ்சத்தில் வார்த்தைகள் இல்லையோ? இருந்தும் ஏதாவது சொல்லியே ஆகவேண்டும் என முயற்சி செய்து சொல்லுகின்றேன்.... நெஞ்சத்தை தொட்டு விட்டது உன் வரிகள்; உன் வரைதல்! என்ற போதும் - இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் வார்த்தைகளை - கவியே உன்னை வர்ணிப்பதற்காக!

55. பிடிக்கிறது!

நான் எத்தனையோ வார்த்தைகள்பேசிய பின்னும் மௌனமாய் இருக்கும் உன் அமைதி எனக்குப் பிடிக்கிறது! உன்னோடே மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தும் பேசாததான நினைவு எனக்குப் பிடிக்கிறது! உன் அருகில் இருந்த போதும் நீ காணாமல் உனை நோக்கிய பார்வை எனக்குப் பிடிக்கிறது! உனக்குள்ளே வாழ்ந்து போதும் உனை விட்டு தூரமாக நீளும் நாட்கள் எனக்குப் பிடிக்கிறது! எல்லாமே இழந்த போதும் உன் அன்போடு உரைந்துப் போகும் சுகம் எனக்குப் பிடிக்கிறது! மொத்தத்தில் நீயே நானாகி போக எனக்கு பிடிக்கிறது!

54. மாற்றங்கள்

பருவ மாற்றத்தை விட படு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றது மனித செயற்பாடுகள்! உருவங்கள் ஒன்றாயிருக்க உள்ளத்தூய்மைகள் தூசுப்படிந்ததாயல்ல கரைப்படிந்ததாய் இன்று! கட்டிக்காக்க வேண்டியது கௌரவம் என்ற காலம் தாண்டி காசுக்கட்டுக்களையே கட்டிக்காக்கின்றனர் கடவுளை விட பக்தியோடு! கர்ப்பத்தில் கருவுற்ற மகவு பாசத்தால் உதைத்தது! - இன்றோ தன்னை பரிசித்த பாசமான தாயை பகட்டாய் உதைக்கின்றது வேஷத்தோடு! அயலவர்க்கெல்லாம் கொடுத்தக் காலம் போயே போச்சு தன் பிள்ளை பசிக்கு விலைப் பேசுகிறாள் ஒரு தாய் இன்று நீ இதை உண்டால் நாளை நீ 5ரூபா தர வேண்டும்! ஆண்களோ! ஆண்மைக்கு அழகான.... வீரத்தை விலைப் பேசுகின்றார்கள் பெண்களோ! பெண்மைக்கு அழகான.... மானத்தை விலைப் பேசுகின்றார்கள் மிருக வெறி கொண்டு மாறி மாறி! இப்படி எல்லாமே மாறிப்போயிருக்க மாற்றம் வேண்டுமாம் உலகினிலே மனதை மாற்றிக்கொண்ட மடயர்கள் இவர்கட்கு! மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமா? மனிதனே மனிதத்தை உனக்குள் இருத்தி மனதைத் திருத்து!

53. வழமைப் போலவே!

வேலைப் பழுவில் வழமைப் போல சற்று தாமதமான மாலை வேளை.... மனதில் காரிருளின் பயம் ஒருபுறம், அளவில்லாமல் அதிகரித்த இதயத்துடிப்பு ஒருபுறம், இதன் நடுவே - இக் களியுகக் கயவர்களின் எண்ணம் ஒருபுறம் இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடிய தவிப்புக்கள் அடுக்கடுக்காய் அகத்தினுள்ளே! ஒருவாறு பெண்ணவள் தன் பெண்ணியத்தினோடு வீட்டை அடைகின்றாள்! வழமைப் போல - தாயாரின் அதே முணுமுணுப்பு “கொஞ்சம் நேரத்தோடு வரக்கூடாதா?” தாயாரின் அன்பின் ஆழம் உணர்ந்த அவள் பொத்துக்கொண்டு வந்த ஆத்திரத்தை தனக்குள்ளேயே அடக்கிக்கொள்(ல்)கின்றாள்! என்று தான் முடிவடையும் இந்நிலை? பெருமூச்சிரைகின்றாள் சோர்ந்து போண மனதில்..... வழக்கம் போல இன்றும் நினைத்துக் கொள்கின்றாள் இதுவே தாமதமாய் வீடுவரும் கடைசி நாளாக வேண்டுமென்று வழமைப் போலவே!

52. உன்னில் தொலைந்த பின்

அன்பனே! உன் மனதை சிறைப்பிடித்த மனதின் நிலை அறிவாயா நீ? என் உணர்வுகளைக் கூட விட்டு வைக்கவில்லை - உன் நினைவுகள்! உன் அசைவுகள் அனைத்தையும் கட்டளைகளாக்கி நடையிடுகின்றது என் உயிர் உன்னோடான நாளைய நாட்களை நோக்கி! உன் அழைப்போசை கேளாத ஜடமல்ல நான் என்னுள் உறைந்த உன் நினைவை உன் ஸ்பரிடம் கூட விளக்கிட வேண்டாமென தான் கண்டனம் கட்டிக்கொண்டு திரிகின்றது என் நடத்தை! நான் வரும் வழி நோக்கி பூக்களை தூவும் நீ புன்னகைக்க மறுப்பதேன் உன் புன்னகையை விடவா பூக்கள் எனைக் கவர்ந்து விட்டன? எனை நோக்கி வரும் அவசரத்தில் நீ - உன் கால்தடப் பதிப்பை தனக்குள் பதிப்பதற்காய் வழி தோரும் - என் இதயம் காத்திருப்பதை காணாமல் விரைவதேனோ? எனக்காக துயில் கொள்ள உன்னருகில் படுக்கையை விரித்து எனை வேறாய் பார்க்கும் நீ.... உனக்குள் வாழும் எனை காணாமல் விட்டது தவிப்பை தருகின்றது! எல்லோரும் உறங்கிய பின் எனக்காக நிலவோடு நிழல் யுத்தம் செய்யும் நீ - உன் இதயத்தின் ஒரு இடத்தில் கூட எனைத் தேடாதது வலியை தருகின்றது! அன்போடு உன் அம்மாவின் அழைப்பை கேட்டு ஆத்திரத்தில் எரிந்துவிழும் நீ உன் ஆத்திரத்தின் ஆத

51. காதல்

விழி அசைவில் கதைப் பேசும் விந்தை செய்தது காதல்! பேசப்பேச பேசத் தூண்டும், பார்க்கப் பார்க்கப் பார்க்கத் தூண்டும், பேசி விட்டால் பார்க்கத் தூண்டும், பார்த்து விட்டால் பேசத் தூண்டும், மாயம் செய்தது காதல்! எனக்கான நேரத்தையும் உனக்காய் தொலைக்கச் செய்யும் உலகத்தின் அன்பினையும் உன் மீதே செய்யத் தூண்டும் வினோதமானது காதல்! இன்று காதல் இன்றேன் சாதல் என்று எனை ஆக்கிவிட்டதும் உன் காதல்! காதல் காதலாகவே காலம் உள்ளவரை காதலர்கள் தான் காமர்களாகி காதலை கொச்சை செய்கின்றனர்!

50. தடுமாற்றம்

என் வெற்றிப் படிக்கட்டின் ஒவ்வொரு ஏற்றத்திற்கும் ஊக்கி நீ தான்! என் உலகம் இருளால் மட்டும் சூழ்ந்துக்கொண்டது - நீ எனை நீங்கிய நாள் முதலாய்! நீ அருகில் இருந்த போது அறிந்து கொள்ள முடியாதவற்றை அலசி ஆராய்கின்றேன் - உன் சுவடுகளாவது எனைத்தொட்டிக் கொண்டிருக்க வேண்டி! இளமை இவள் இசை மீட்ட வந்த இனிய இசை நீ - இன்று உன் இசையோடு இவள் ஸ்ருதி சேரவில்லை என சொர்க்கம் சென்றதேனோ?

49. நண்பியே

நண்பியே! உனைக் காணாத இவ்விரண்டு நாட்களில் நரகத்தின் வாசல் தொட்டு மீண்டது என் உயிர்.......! இன்று; மீண்டும் உயிர்ப் பெற்று உள சுவாசம் கொண்டேன் உன் வருகையால்! உனைக் கண்டு நான் உதிர்த்த கொடூர வார்த்தைகள் உன் இதயத்தை சுக்கு நூறாய் கிழிப்பதற்காய் அல்ல உன் மீது நான் கொண்ட அன்பின் ஆழமே! இன்றென்னவோ என் வாழ்வில் எனக்குள் மரணிப்பின் வலி மறக்க செய்வது உன் அருகாமை! உன் அன்பை அளவிட முடியவில்லை, சுவாசிக்கின்றேன் இடைவிடாமல்! இறுதி வரை - உனை எனக்காய் கேட்க முடியவில்லை, இருந்தும் இருக்கும் வரையேனும் எனை நீங்காதிருக்கக் கேட்கின்றேன்! உன் அன்பின் வெளிப்பாடும் மென்மையும் வியக்கின்றேனடி; உன்னால் மட்டுமே முடிகிறது உனைப் போல் அன்பு செய்ய! உதறிவிடாதே உருக்குழைந்து போய்விடும் என் நாட்கள்! மன்னித்துக் கொள் மங்கையே மதிகெட்டு நான் உதிர்க்கும் வார்த்தைகளுக்காய்..... மன்னித்துக் கொள் மங்கையே மனம் நொந்துவிடாதே! தனிமையின் கொடுமை தாங்கமுடியவில்லை மபுணிப்பைத் தேடியே மனம் சென்றது! உனை மறவாமல் மனம் வாடி நின்ற வேளை மறு நட்பாய் பூச்சி தன் புன்னகையாலே...... மறந்து