Posts

Showing posts from December, 2009

தொடங்கிடுங்கள்

நித்திரை தொலைத்த நெஞ்சத்தின் குமுறல் நித்தமும் பிழியும் உண்மையின் நினைவுகள்.... தமிழ் தாகமும் தேகமும் பசிக்கு இரையாகும் போது எங்கே ஒழிந்தன உங்கள் போர்க் கொடிகள்.... வெல்வேன் வீழ்த்தி வாளேந்தி சொன்னீர் அன்றைய முழக்கத்தின் சுவடுகள் எங்கே.... ஆயுதம் இழந்தேன் அழுது துடிக்கின்றீர் அடிமையானேன் நீரே உரைக்கின்றீர்.... புரியாதவரே....! உங்கள் எண்ணங்களின் சிசுக்கள் விரல்வழி பிறக்கட்டும் உங்கள் பேனையை விடவா ஆயுதம் வேண்டும்.... படிந்த கரும்புள்ளிகளை காணாமல் செய்து புதியதோர் யுகத்தை புதிதாய் சமைக்க..... இன்றே தொடங்கிடுங்கள் உள்ளே உறங்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து உண்மையை விளக்கிட.... கத்தி முனையை விட கூர்மையாய் இருந்து குத்திக் கிழிக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்!

பெண்களும் வன்முறைகளும்

Image
இன்றைய உலகம் எத்தனை தான் முன்னேற்றங்களைக் கண்டு , எட்ட முடியாத தூரத்தை நோக்கி சென்று கொண் டிருந்தாலும் பெண்களைப் பாதிக்கும் வன்முறைகள் காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவம் பெருகின்றனவே தவிர இன்றும் அதே அளவில் காணப்படத்தான் செய்கின்றன . என்ன தான் பெண்களைப் பாதிக்கும் வன்முறைகளை ஒழிப்போம் என கோஷம் போட் டாலும் குறையுரா நிலையில் அத ன் நீட்சி அமைகின்றது . 1999 ல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தமையை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதியை " பெண்களைப் பாதிக்கும் வன்முறை யை ஒழிக்கும் தினம் " என பெண்களுக்கானதொரு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் இன்றும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளே இல்லை . உலகளாவிய கணிப்பில் இவ்வாறான வன்முறைகளால் 70% பெண்கள் உடல் மற்றும் உள ரீதியில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன . அதாவது மூன்றில் இரு பெண்கள் வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன . பெண்களும் வன்முறைகளும் என பார்க்கும்போது அதனை இருவகையாகப் பி ரிக்கலாம் . அவையாவன ,

நாளைய பதிவர் சந்திப்பு

Image
பதிவர்களின் பல வருட கனவுகளை நனவாக்கும் வண்ணமாக கடந்த ஆகஸ்டு 23ம் திகதியன்று கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் இனிதே நடாத்தி முடித்த முதலாவது இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலானது இன்றைய பதிவுலகை கலக்கி வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பதிவுலகத்தை தத்தமது பதிவுகளால் கலக்கி வரும் பதிவர்களை சந்திக்கும் ஆர்வம் அனைத்து பதிவர்களின் மனதையும் துளைத்து எடுப்பதும் உண்மையே. இவ்வாறான பதிவர்களின் அவாவுக்கு தீணிப்போடும் வண்ணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்) நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பானது குறித்த வேளையில் ஆரம்பிக்கப்படும் என்பதை ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு ஏலவே பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்களையும், கடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள தவறிய பதிவர்களையும் வருக வருகவென வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இதோ உங்களுக்காக நிகழ்ச்சி நிரல் மீண்டும் ஒருமுறை * அறிமுகவுரை * புதிய பதிவர்கள் அறிமுகம் * கலந்துரையாடல் 1 : பயனுறப் ப

உன்னால் நான்

உன் காதல் பள்ளியில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் நான்! உன் புறக்கணிப்புக்களால் புதைக்கப்பட்டதாக என் வாழ்க்கை! சுவாசங்களின் இடைவெளியையும் சுருட்டிக் கொண்டது உன் நினைவு! என் இரவுகளெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் கனவானதும் உன்னால்! விழி துயில் கொள்வதும் தினம் விழித்துக் கொள்வதும் உன் தரிசனத்திற்காகவே! இன்று உன் விடை பெறலால் வினாவாகி தொக்கி நிற்பதுவும் நானே!

ப ச கஞ்ச கிறுக்கனுக்கு பரிசு

டுமீல் டுமீ்ல் சத்தமில்லா புல்லட் அடக்கிடுவோம் வரிகளிலே இவன் துல்லல் பார்ப்பதற்கு தானே அப்பாவி பதுங்கியிருந்து பாய்வதில் அடப்பாவி ஊமையாய் இருந்துவிட்டால் உதைப்பான் உரத்தலிலேஅடங்கிடுவான் பொட்டிப்பாம்பாய் போற்றச்சொல்லி கெஞ்சுவிட்டான் மாறி பாவம் புகழ்ந்தே தள்ளிடுவோம் வாரீர் வாசல் தாண்டி வந்துவிட்டான் போலி வந்தவனின் பேரோ கொல்பவன் தன்னை தானே கிரேட் என்னும் கேடி மூளைக்குள்ளே சேர்த்து வைத்தான் மண் கட்டி பத்து ரூபாய் தந்தால் போதும் சிரிப்பான் மாறி பத்து பைசா கேட்டால் கூட கடிப்பான் சிங்கமென சொல்லும் இந்த பூனை சீதனமாய் கேட்பதுவோ யானை மூன்று ரூபாய் தர மாட்டான் பாவி மூன்று கோடி தானே இவன் கொள்கை தன்னை தானே நொந்து கொள்ள தவிப்பான் தன் நக்கலிலே நூறு பேரை புதைப்பான் மாறி மாறி வாளி வைக்கும் பாவி இவன் வந்தாலோ ஆள் அன்று காலி எலிக்குட்டியை தொட்டணைத்த தோழன் இவன் தானே கூட்டத்திலே கோமாளி பார்த்து பார்த்து படித்ததுவோ எலக்ரோனிக் அதுவே பக்கத்தில் இருப்பவனுக்கு இப்போ எலக்ர்ரிக் சோக் வேற்றுமைகள் காட்ட மாட்டான் வசைபவன் கும்மி கொட்டுவதில் இவனொரு கிழபவன் தினம் நூறு வேசம்

காதல் செய்வோம் வாராய்

சிறுக சிறுக சேர்த்து வைத்த சிந்தனைகளை சிதறடிப்பதான் உன் வார்த்தைகள் அவ்வப்போது சீற்றம் கொள்ளும் மூர்க்கமான முன் கோபம் - என எல்லாமே வதைத்தாலும் கல்வெட்டாய் பதிந்து விட்ட உன் நினைவு தழும்புகள் நினைவுள்ள வரை நீங்காது என்னில் - நீ அன்பின் சிகரம் அவ்வப்போது உன்னால் துப்பப்படும் அமில விஷங்கள் அனைத்தையும் செயலிழக்க செய்கின்றது என்றாலுமே இன்று வரை - உன் மீது கொண்ட காதல் உணர்வு கறையாமல், குறையாமல் கடந்து வருகி்ன்றன கண்மணியே விண் முட்டும் ஒலியோடும் - கண் தெறிக்கும் ஒளியோடும் காதல் செய்வோம் வாராய் வாழ்வின் வசந்தங்களை வறுமையிலும் வசமாக்கிட!

இனி வேண்டாம்

அணு தினமும் துதிப் பாடி மன்றாடி உனை நாடி மடி பிச்சை கேட்கின்றேன் மறு ஜென்மம் இனி வேண்டாம் இருந்தாலும் மறுபடியும் வேற்றுமைகள் காட்டிவரும் ஒற்றுமைகள் குழைத்துவிடும் மனிதப் பிறவி இனி வேண்டாம் மாற்றானின் மனை கவர்ந்து தன் மனையை அழகாக்கும் அழுக்கான மனங்கொண்ட மனிதப்பிறவி இனி வேண்டாம் பொன்னோடும் பொருளோடும் சுகமாக தினம் வாழ்ந்து மகிழ்வோவே மாண்டாலும் மறு ஜென்மம் இனி வேண்டாம்

ஏக்கம்

அன்பின் ஊற்றுத்தான் ஆனந்த கானம் தான் இன்பத்தின் வெள்ளம் தான் இனியதொரு குடும்பம் தான் இன்னிசை பயின்ற இனிமை காலம் மின்மினி தேசத்து மிளிரும் ராதை விதியின் விளையாட்டு திருப்பம் உறவோடு உறையுளும் தொலைத்த நிலை பணத்தின் மதிப்பு பாசத்திற்கில்லை பற்றற்ற வாழ்வு பழக்கப்பட்டியல் எட்டிய மன்னவன் எட்டிடும் துடிப்பு ஏழை வீட்டு வைரக் கனவு ஏக்கமும் தாக்கமும் இரு உலகம் இருக்கையில் பறித்தல் இறைவன் தேடல் பழக்கமும் வழக்கமாய் பாவி துடுத்தாள் பக்கத்தில் உற்றவன் சுவாசம் பெறவே!

யாழ்தேவியும் பெண்களுக்கான வுமன்ஸ்.கொம்மும்

இதோ இதுவரை பொதுவான ஆக்கங்களை வெளியிட்டு வந்த யாழ்தேவி பதிவர்களை தினக்குரலில் அறிமுகப்படுத்தி வந்தது. மிகக் குறுகிய காலத்துக்குள் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்ட யாழ்தேவி இன்று பெண்களை கருத்தில் கொண்டு பெண்களுக்காக தனித்து இயக்கப்படுவதாக ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ வரும் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இயக்கவுள்ளது. இவ்வாறாக பெண்கள் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் பெண்களை ஊக்கப்படுத்தும் வண்ணமாகவும் தொடக்கப்படவுள்ள யாழ்தேவியின் ‘வுமன்ஸ்.யாழ்தேவி.கொம்’ உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வாறான ஒரு பெண்களுக்கான தனிப்பகுதி தொடங்கப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இன்று எத்தனை தான் கலாச்சார, தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் பெண்களை அடிமைப்படுத்தும் தனம் இன்றும் குறையவில்லை. எத்தனை தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் இன்றும் மட்டுப்படுத்தும் தன்மையும் குறையவில்லை. ஆண் பிள்ளைகளுக்கு வழங்க்கப்படும் சுதந்திரம் இன்றும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலைகளை மாற்ற வேண்டுமானால் இன்றைய இளம் பெண்கள் மத்தியில் விள

நன்றி நவிலல்

Image
பதிவர்களோடு பதிவராக பதிவுலகில் நடைப்பயிலும் யாழ்தேவி நிர்வாக குழுவினருக்கும், தினக்குரல் பத்திரிக்கை நிருபர்களுக்கும் நன்றிகள் கோடி....! உடனடியாக நன்றி நவில முனைந்தும் ஒரு சில வேலைப் பளு காரணமாக சில நாட்களை கடந்த நிலையில் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதையிட்டு மனவருத்தமடைகின்றேன். எனது ஆக்கத்தை தினகுரலில் பிரசுரித்து தந்தமைக்கு நன்றிகள் இரு சாராருக்குமே. பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மைகளோடு தமது ஆக்கங்களை அவரவர் சொந்த தளத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். அவர்களுக்கென பதிவுலக நண்பர்களின் கருத்துப்பகிர்வுகளும், பின்னூட்ட ஊக்குவிப்புகளும் என்றென்றும் காணப்படும் என்றாலும் பதிவுலக பதிவர்களின் ஆக்கங்களை அவர்களின் அறிமுகத்தோடும், படத்துடனும் வெளியிட்டு தளத்துக்கான அனேகரின் வருகையை ஏற்படுத்தித்தருவதான இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது. இது வளர்ந்து வரும் பதிவர்களை மேலும் ஊக்குவித்து அவர்களை மேலும் மேலும் எழுதத்தூண்டும் முயற்சியாகும். இது போன்ற உங்கள் நற்பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!