Search This Blog

Loading...

Saturday, May 21, 2011

என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன்

இன்று எங்கு பார்த்தாலும் ஒருவர் இன்னொருவரை குறை கூறுவதும் இன்னொருவர் மற்றொருவரை குறை கூறுவதுமாக தொடர்கின்றதே தவிர தன் குறைகளை இனங்கண்டு அவற்றை அகற்றுவார் மிக குறைவாகவே இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை அசைப்போட்டதில் அருவருப்பு தன்மை சூடிக்கொண்டது.

உண்மை தான் இன்று பொதுவாக ஆண்களே தவறு செய்பவர்களாக சுட்டிக்காட்டப்படுகின்றார்கள் பெண்கள் விடயத்தில் ஆண்கள் மோசமானவர்கள் அப்படி இப்படி எல்லாம் கதைக்கின்றார்கள் ஆனால் ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்பதே என் வாதம் (இங்கு தவறு செய்யும் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்) என்னடா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தன்னினத்தைப் பற்றியே குறைக்கூறுகின்றாளே என நினைக்கின்றீர்களா? யார் செய்தால் என்ன தவறு தவரு தானே...? அதிலென்ன ஆண் பெண் என்ற பேதம்???

என்ன சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றாள் என யோசிக்கின்றீர்களா? விடயத்தோடு தான் பேசுகின்றேன் ஆம் கடந்த சில மாதங்களாக எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் தொலைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அந்த குறித்தப்பெண் யார் என்பது சார்பான தகவல்கள் எதனையும் என் நண்பன் அறிந்திருக்கவில்லை மேலும் அவர் யார் என்பதனை அடையாளம் காண வேறு நண்பர்கள் மூலமாக அழைப்பேற்படுத்தியதில் ஆண்கள் யாராவது பேசும்போது மாத்திரம் உரையாடலை தொடர்வதும் பெண்கள் யாராவது அழைத்தாள் தொடர்பைத் துண்டிப்பதுமாக இருந்தாள் எனவே இவர் சார்பாக மேலும் ஆராய்ந்ததில் அவர் கல்யாணமானவர் என்பதும் ஒரு குழந்தைக்கு தாய் என்பதும் தெரியவந்தது மேலும் அவர் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே ஆச்சரியப்பட வேண்டியது யாதெனில் இவர் இரு தொலைப்பேசி இலக்கங்களை வைத்துக்கொண்டு பல ஆண்களுடன் உரையாடி இருக்கின்றார் என்பதும், தவறான குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், முகப்புத்தகத்திலும் உரையாடி வந்திருக்கின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆதார பூர்வமாக பெண்கள் செய்யும் தவறுகள் நிரூபிக்கப்பட ஏன் ஆண்கள் மீது மட்டும் குற்றம் சுமத்த வேண்டும்? இவர் குறித்து இவரது கணவருக்கு தெரியப்படுத்தலாமா? அவ்வாறு தெரியப்படுத்துவதனால் அந்த சிறு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமா? இவ்வாறான பெண்களுக்கு எத்தகைய தண்டனைகளை வழங்கலாம் என்பதை பின்னூட்டுங்கள் நண்பர்களே

Tuesday, January 4, 2011

இதயம் பேசுகிறது

இளமை மறந்து இரவுகளோடு இருண்டு போன

நாட்களைக் கடந்து இதயங்கள் பேசிக்கொள்ளும்

காலம்..... இது இனிமை காலம்!


தனிமைச்சிறை தன்னை கவ்விக் கவ்வி

தலையாட்டிச் சென்றதொரு காலம்

அது இறந்த காலம்!


இழப்புக்கள் இடியென தாக்க...

இன்பத்தின் சுவடுகள் மறைய...

இருதயம் நொருங்கிப்போன தடயங்கள் ஏராளம்


அவன் இருப்பான் இவன் இருப்பான் சொல்லிச் சொல்லி

கடந்து வந்தேன் சொல்லாமல் எவனிருப்பான்? என்று

ஏங்கியதொரு காலம் - அது கடந்த காலம்!


நரகமும் சொர்க்கமயம் விசமதும் அமிர்த உணவு

அகிம்சைகள் அணைத்துக் க்ஒண்டு அன்பதோ என்னை ஆளும்

அழகிய காலம் அது என்னோடு நீ இருக்கும் நிகழ்காலம்!


மீண்டும் மீண்டும் வேண்டும் இந்த இனிமை காலம்

நிஜங்களை என்னில் ஏந்திக்கொள்ள...!

Monday, January 3, 2011

அன்பே நீ வருவாயா...?

மறுத்துப்போன உணர்வுகளை சுமந்து

உதிரம் சிந்திய என் இதயத்தூடும்

உலாவரும் உனக்காக

எழுதுகின்றேன் ஒரு கடிதம்


பதில் கூட வினா தொடுக்கும்

வேள்விகள் அரங்கேறியதில்

உள்மன ஓலங்கள்

மௌனமாய் மறைந்தன


தவிப்போடு தடுமாறிய கணங்களில்

தலைசாய்க்க மடி தேடியதில்

தோற்றுப்போன என் மனவலியை

தலையணையைத் தாண்டி யார் அறிவார்?


உனைத் தேடி உனைத்தேடி

உரிமைப்போர் நிகழ்த்தி தோற்ற

விம்மலின் ஏக்கத்தோடே தூக்கம் தொலைத்தது

என் எத்தனை இரவுகள்?


இறுகிப்போன மனதினில்

இறுக்கி வைத்த உன்னன்பில்

இளைப்பாற இன்றும் துடிக்கிறேன்

அன்பே நீ வருவாயா...?


விந்தை உலகில் விழித்தெழு மனிதா....!

"சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவுகாண்பதில் செலவழிக்கி
றான்" என்று ஆய்வுகள் கூறுகின்றன. அன்றாடம்எம்மவர்கள் மத்தியில் பரிமாறப்படுவது தான் இது சார்ந்த தகவல்கள்என்றாலும் கனவு என்பது உண்மையா? என்ற சந்தேகம் பெரும்பாலும் இன்றுவரை காணப்படவே செய்கின்றது. அதனிலும் கனவு கலர் கலராகவருகின்றனவா...? அல்லது பிளாக் & வைட்டாக வருகின்றனவா..?என்றெல்லாம் பலவாறான சந்தேகங்கள் காணப்படவே செய்கின்றது. மேலும்கனவு ஏன், எதனால், எப்போது ஏற்படுகின்றது? கனவு காண்பதென்பது ஒருகுறைபாடா என்பதான சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன.

இது சார்ந்த சில தகவல்களை ஆராய்வோம். கனவு என்பது ஒருவர் தூங்கும்பொழுது அவரது மனதில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள்,உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரதுகண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கனவுஎன்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு பூரண அறிவியல் புரிதலை இன்றுவரை அடைந்தபாடில்லை.

ஒரு நபர் சிறிது நேரம் ஏதாவது சிந்தனையில் இருப்பாராயின் அவரிடமும்கனவு காண்கின்றாயா என்ற கேள்வியை தொடுக்கின்றோம். மற்றும் ஆழ்ந்தஉறக்கத்தில் விழிப்பவர்கள் கனவு கண்டதாக ஏதாவது சந்தர்ப்பத்தை முன்வைப்பார்கள் இதில் எதை உண்மையில் கனவு என்கின்றோம் என்ற புதியசந்தேகமும் மூளைக்குள் பிசைகின்றதா? ஆம் கனவை இருவகைப்படுத்தலாம்.
முதலாம் வகை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கண்களுக்குள் ஏதோ ஒருநிகழ்வு படமாக முன்னகர்தல் இரண்டாமது நம் எதிர்காலம் குறித்து நாம்இப்படித் தான் வாழ வேண்டும், இப்படியான செயல்களை செய்ய வேண்டும் எனஇலட்ச்சியங்களை வளர்த்துக் கொள்வதோடு அதனை அடையும்வழிமுறைகளை சிந்தித்து அதனை அடைய முயலலும் ஆகும்.
மேலும் சமய ரீதியாகவும், விஞ்ஞன ரீதியாகவும் வெவ்வேறான பலகருத்துக்கள் கனவு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மூளைக்குசெல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம்கனவுகள் வருவதாக விஞ்ஞன ஆய்வுகள் கூறினாலும் கனவுகள் ஆழ்மனதில்படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின்வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமதுகுணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்டவிவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்துகொண்டே இருக்கின்றன என ஒரு தரப்பினரும் சமய ரீதியாக எதிர்காலத்தில்நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவிக்கும் அபூர்வ சக்தி கனவுஎன்றும், அவற்றிற்கான சான்றுகள் உள்ளன என இன்னொரு தரப்பினரும்கூறுகின்றனர்.

சிலர் ஏதோ ஒன்றை கண்டதாக உணர்ந்து திடுக்கிட்டு அசைவர் ஆனாலும் என்னஎன்பதை மறந்ததாக கூறுவர். மற்ற சிலர் ஏதோ படக்கதை போல சொல்லிக்கொண்டே போவார்கள். மற்றவர்கள் தான் முதல் நாள் கண்ட கனவு மறு நாளும்தொடர்வதாக கூறுவார்கள் இவ்வாறான தன்மையை கண்டினியூவல்ஆக்டிவேஷன் என்று அழைக்கின்றனர். இன்னும் சிலர் தனக்கு கனவேவருவதில்லையே என புலம்பிக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்அவர் மூளையின் அதிரடி செயற்பாடே என்கின்றது இன்னொரு ஆய்வு. ஆம்அரைவாசி உறக்கத்திலுள்ள மூளை தான் கனவுகளின் அடிப்படைக் காரணம்என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில்காணும் கனவுகள் தான் நினைவில் இருக்கின்றன எனவும், மறந்து போய்விடும்கனவுகள் மூளை நல்ல உறக்கத்தில் இருக்கும் போது பிறப்பது எனவும்கூறுகின்றார்கள்.

கண்களின் அசைவை வைத்தே நாம் எந்த நேரத்தில் எவ்வகையான கனவைகாண்கின்றோம் என அறியலாம் என்பதை முதன்முதலில் கண்டறிந்தஅஸெரின்ஸ்கி 1953 ல் இவ்வாராய்ச்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.மேலும் பலர் இது தொடர்பான ஆய்வுகளை இன்று வரை நிகழ்த்திக் கொண்டேஇருக்கின்றார்கள். என்றாலும் மனதின் பயமோ, மன அழுத்தமோ, ஆழ் மனதில்பதிந்து போன ஆசைகளும் எம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளோடுஒத்துப்போகின்ற போது தான் கனவாக வருகின்றது என்ற பொதுவான கருத்தும்காணப்படுகின்றது. அதாவது அதிகமாக நாம் எதைப்பற்றி சிந்திக்கின்றோமோஅதுவே கனவாக வருகின்றது. ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின்வெளிப்பாடே கனவாக அமைகின்றதாம். அதனிலும் ஆண்கள் காணும்கனவுக்கும் பெண்கள் காணும் கனவுக்கும் அனேக வித்தியாசங்கள்இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கனவுகள் பல்வேறான கோணங்களில் வெவ்வேறான கருத்துக்களைக்கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. நல்ல கனவுகளால் மன மகிழ்ச்சிகிடைத்தாலும் சில தீவிரமான கனவுகளால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததேஏராளம். எனவே இந்த கனவு காணலை விளக்கி அன்றாட வாழ்வோடு ஒட்டிஉறவாட உங்களுக்கான யோசனைகள் சில

** மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளல்
** தேவையற்ற விடயங்களைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்தல்
** தினமும் குறித்த நேரத்திலேயே படுக்கைக்கு செல்ல பழகிக் கொள்ளல். அதேபோல குறித்த நேரத்திலேயே விழித்தெழல்
** மெல்லிய இசை கேட்டல்
** ஆரோக்கியமான நல்ல புத்தகங்களை வாசித்தல்
** உடலையும், மனதையும், தூங்கும் சூழலையும் தூய்மையாக வைத்துக்கொள்ளல்
** படுக்கையை வசதியானதாக அமைத்துக் கொள்ளல் (தலையணை, விரிப்பு)
** தூங்குவதற்கான சூழல் இருக்கின்றதா எனப்பார்த்துக் கொள்ளல் (அமைதியானஇருளான அமைப்பு)
** தூங்கச் செல்வதற்கு முன் சிறிது தூரம் நடை பயிற்சி செய்தல்
** இரவு உணவை முடித்துக் கொண்டதுமே உறக்கத்தை தேடாமல் சிறிதுநேரத்தின் பின் படுக்கைக்கு செல்லல்.
** குடிப்பழக்கத்தை தவிர்த்தல்

இவ்வாறான சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் கனவு எனும் பயங்கரத்திலிருந்து தப்பித்து ஆழ்ந்த உறக்கத்தை நிம்மதியாக அடையலாம்.

நன்றி இருக்கிறம்

Wednesday, October 20, 2010

LOVE LINES

Oh my Dear! Am Wondering…..

Yes! Still am wondering about the precious life with you

Unexpectedly, you came to my life as a great friend

&

Unconditionally became a best part on me

I know, when you read those lines

You will be laugh out & think I’m joking

But believe this my love; this isn’t a lyrics

This is a real thought from a small heart

With lots of love

Sometimes you will throw this as a paper

But just remember this is my heart

It’s only beating for you

Just for you

I couldn’t include my feelings in these lines

And I don’t know to express, how my love growing for you

And what inside me is real

But am sure one day let you will know my love

And Search me as am searching you

Yes! I mean it darling

Just smile for me

Memories of you hugging me everyday

Moment I spent with you are the real risen in life

Dear.. my mind won't settle without you

Love me as am loving you

You can just throw me out

But how you will erase my thoughts

Its spared with your breath dear

You've become a part of who I am

Don’t let me down my love

You are the right choice of mine

Only You are me

Believe me all i say is true!