Posts

Showing posts from May, 2025

மன்னிப்பாயா

ரோஜாவை நேசிக்கும் மனங்கள்  எத்தனை முட்களுக்கு நடுவில் முட்டி மோதி அரும்பாய் துளிர்கிறது என்னும் வலியை நினைத்து பார்ப்பது கூட இல்லை - சிலர் வாழ்வும் அப்படித்தான் வெளித்தோற்றத்துக்கும் உணர்வுக்கும்  தொடர்பே இருக்காது  புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் புறம்பேசும் உறவுகளின் முன் முட்டி மோதி எழுந்து நிற்பதற்குள் சிலர் வாழ்வு முடிந்தே விடுகிறது என்னது ஏதோ ஒரு விளிம்பில் தொடுத்துக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இருந்தாலும், இதயத்தை குடைந்து எடுக்கும் வலி ஒன்று அவ்வப்போது வந்து போவது வழக்கமாகி போனது - மனசு நான் அடைந்த வலியை  யாருக்கும் கொடுத்துவிட கூடாது எனும் தெளிவில் தீர்க்கமாய் உள்ளது குத்திக்கிழிக்கும் வலி கொடியது  அதுவும் எனக்கு பிடித்த உனக்கு விரும்பியா கொடுத்திருப்பேன் என் அறியாமை, கோபம்  என் காதலையும் சேர்த்தே கல்லறைக்குள் தள்ளிவிட்டது மீளவும் முடியாமல் - முழுதாய் மூழ்கவும் முடியாமல்  தத்தளிக்கும் மனதுக்கு மருந்து நீ நலமாய் இருக்கிறாய் எனும் செய்தி மட்டுமே - நானே இல்லாமல் போனாலும் நீ மனம் தளராதே - மகிழ்வாய் இரு மன்னித்து விடு உனக்கு செய்த அத்தனைக...

தொட முடியாத தூரம்

எண்ணங்களின் ஓட்டம் எங்கோ செல்ல என்னை மெல்ல மெல்ல  சூழ்ந்துக்கொள்ளும் இருள் - நெஞ்சை இறுக பற்றிக்கொள்ளும் பயம் எதனால் என்று அறியாதிருக்க - நான் அறிவேன் என்ற பேரொளி, அச்சம் என்னை ஒருநொடி அனைத்து கொன்றது மெல்ல மெல்ல மெல்லிய ஒலியில் நீ யாரென்றேன் - உன்  மனம் தான் என்றது அது உலகமே அதிர உதிரம் உறைவதாய் அறிந்தேன் உதடுகள் ஏதோ முணுமுணுக்க அவயவங்களை அசைக்க முடியவில்லை மெல்ல மெல்ல மயங்கியே போனேன் மீண்டும் ஒரு கனவு கனவோ, என் நினைவுகளின் வண்ணமோ எனக்கு பிடித்தமான நினைவுகளை மட்டுமே கோர்த்து  வானவில்லாய் தொடுத்திருந்தது அழகிய கிராமம்  அதன் நடுவே சில வீடுகள் விளையாட்டு மைதானம் பள்ளி, மருத்துவர் என அத்தியாவசியமான சிலதும் உள்ளடக்களாக ஏனோ அந்த நினைவுகள் என்னை  மேலும் மேலும் இன்புற செய்தன தொடர்கிறேன் மயான அமைதி - தூரமாய் உன் குறுகிய கண்களோடு  சிரிக்கும் சிரிப்பின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது என் கண்களில் பிரகாசமாய் உன் உருவம்  மனம் முழுவதும் உன் ஆழமான நினைவுகள் நீ என்னை அருகில் வருமாறு அழைக்கிறாய் அப்படியே கண் விழிக்கிறேன்  தூரமாய் உன் உருவம் மறைந்து கொண்டிருந்தது...