தொட முடியாத தூரம்

எண்ணங்களின் ஓட்டம் எங்கோ செல்ல
என்னை மெல்ல மெல்ல 
சூழ்ந்துக்கொள்ளும் இருள் - நெஞ்சை
இறுக பற்றிக்கொள்ளும் பயம்

எதனால் என்று அறியாதிருக்க - நான்
அறிவேன் என்ற பேரொளி,
அச்சம் என்னை ஒருநொடி
அனைத்து கொன்றது

மெல்ல மெல்ல மெல்லிய ஒலியில்
நீ யாரென்றேன் - உன் 
மனம் தான் என்றது அது
உலகமே அதிர

உதிரம் உறைவதாய் அறிந்தேன்
உதடுகள் ஏதோ முணுமுணுக்க
அவயவங்களை அசைக்க முடியவில்லை
மெல்ல மெல்ல மயங்கியே போனேன்

மீண்டும் ஒரு கனவு
கனவோ, என் நினைவுகளின் வண்ணமோ
எனக்கு பிடித்தமான நினைவுகளை
மட்டுமே கோர்த்து 
வானவில்லாய் தொடுத்திருந்தது

அழகிய கிராமம் 
அதன் நடுவே சில வீடுகள்
விளையாட்டு மைதானம்
பள்ளி, மருத்துவர் என அத்தியாவசியமான
சிலதும் உள்ளடக்களாக

ஏனோ அந்த நினைவுகள் என்னை 
மேலும் மேலும் இன்புற செய்தன
தொடர்கிறேன்

மயான அமைதி - தூரமாய்
உன் குறுகிய கண்களோடு 
சிரிக்கும் சிரிப்பின்
எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது

என் கண்களில் பிரகாசமாய் உன் உருவம்  மனம் முழுவதும் உன் ஆழமான
நினைவுகள்
நீ என்னை அருகில் வருமாறு அழைக்கிறாய்
அப்படியே கண் விழிக்கிறேன் 
தூரமாய் உன் உருவம் மறைந்து கொண்டிருந்தது

உரக்க உன் பெயர் சொல்லி அழைக்கிறேன்
உனக்கு கேட்டதாக இல்லை
என்னால் எழ கூட முடியவில்லை
நாக்கு வறண்டு வார்த்தைகள் வர மறுக்க
கண்ணீர் வழிந்தோடியது 

நானும் நிஜவுலகுக்குள் வந்தேன்
கண்ணீர் துளிகள் மட்டும் கசிந்தபடியே இருந்தது
கனவுக்கு கூட உன்னோடு என்னை சேர்க்கும் சக்தி இல்லை
நொந்து கொள்வதை தவிர வேறென்ன செய்ய நான்

பித்து பிடித்ததை போல் ஆனேன் நான்;
எண்ணங்களின் ஓட்டம் மீண்டும் எங்கோ சென்றது....!







Comments

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு