அன்பே நீ வருவாயா...?

மறுத்துப்போன உணர்வுகளை சுமந்து

உதிரம் சிந்திய என் இதயத்தூடும்

உலாவரும் உனக்காக

எழுதுகின்றேன் ஒரு கடிதம்


பதில் கூட வினா தொடுக்கும்

வேள்விகள் அரங்கேறியதில்

உள்மன ஓலங்கள்

மௌனமாய் மறைந்தன


தவிப்போடு தடுமாறிய கணங்களில்

தலைசாய்க்க மடி தேடியதில்

தோற்றுப்போன என் மனவலியை

தலையணையைத் தாண்டி யார் அறிவார்?


உனைத் தேடி உனைத்தேடி

உரிமைப்போர் நிகழ்த்தி தோற்ற

விம்மலின் ஏக்கத்தோடே தூக்கம் தொலைத்தது

என் எத்தனை இரவுகள்?


இறுகிப்போன மனதினில்

இறுக்கி வைத்த உன்னன்பில்

இளைப்பாற இன்றும் துடிக்கிறேன்

அன்பே நீ வருவாயா...?


Comments

Anonymous said…
hej,அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்கள் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!k.....!

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு