Posts

Showing posts from June, 2010

தலை நிமிர்ந்து செல்லுவோம்

வஞ்சங் கொண்டவர் புடைசூழ குலவி வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! மனை பறித்து இடை மடமமைத்து கொடுத்து மந்தைகளி லொன்றாக எம் குலமும் சேர்க்க உடன்பிறந்த உறவுகளை ஒவ்வொன்றாய் க லைத்து உடலோடு மனமுடைந்து சோர்ந்து விட்ட போதிலும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! நோக்குந் திசையெலாம் களியாட்டம் வளியாகி மண் பறித்த நோ வந்து நெஞ்சையு மடைத்து தீண்டும் தென்றலும் தீய தனலாக எரித்து இரவிலொரு ஒளிவீச்சு கண்பறித்து போகினும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! களிப்பினொடு காலனும் பாசக் கயிற்றை நீட்டி காயத்தில் மண்ணள்ளி தூவிவிட்டு சிரித்து சிறைவாசல் களிதன்னை ஏற்று தினம் வாடி சீற்றமுற சிங்கமும் உயிர் குடித்து போகினும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! வேஷங்களைப் பூசிக்கொண்டு வாசல் வரை வந்து பொய் ப

சித்திரம் பேசுதடி

Image
Picture is a poem with out words

புரியா நிஜங்கள்

நினைவு தோற்கும் போது கனவு தானே வாழ்க்கை கவலை சுமந்து சுமந்து களைத்துப் போவதேது...? உறவு உதறும் போது உணர்வு தானே வாழ்க்கை உரிமை கோரிக் கோரி இடிந்துப் போவதேது...? தனிமை சூழும் போது மௌனம் தானே உறவு... துணையை தேடித் தேடி தொலைந்துப் போவதேது....? மனது நோகும் போது நினைவு தானே உறவு மரணம் தேடித் தேடி விரைந்துப் போவதேது...? வினாக்களில் விடைகள் ஒழித்துக் கொண்டு விந்தை செய்யுது உலகம்! விடைத் தேடிய புரியா நிஜமாய் புவி சூழ உயிர்கள்!

நீ தானே என் சுவாசம்

நினைவுகள் சுமக்கும் இதயத்தின் ஆழம் புதைத்தேன் உனதுருவம் கனவுகளை சேர்த்து கண்களில் கோர்த்து அமைத்தேன் புது உலகம் தினம் தினம் நூறு கவிதைகள் கொண்டு வரைந்தேன் ஒரு கடிதம் மதியெல்லாம் உனதாக மனமெங்கும் நீயாக காதல் வரமானது ( நினைவுகள் சுமக்கும் ) கண்களின் ஓரம் மின்னிடும் ஜாலம் நீயன்றி யார் தந்தது ..... இனிமைகள் தந்தாய் இம்சையும் செய்தாய் என் முன்னே நீயாய் வந்தாய் இத்தனை காலம் இல்லாத மாற்றம் என்னுள்ளே யார் தந்தது .... கனவெல்லாம் உனதாக கவியெல்லாம் அழகாக என்னுள்ளே நீயாய் வந்தாய் ( கண்களின் ஓரம் ) பூவோடு உரசும் காற்றுக்கள் பேசும் புதிர் தானே உன் ஸ்பரிசம் உயிர் வாழ தூண்டும் உணர்வெல்லாம் ஆளும் புதுமையே உன் சுவாசம் அனிச்சத்தின் அழகாம் அலை வான ஒளியாம் பேசும் மொழியின் மென்மை மின்னல்கள் இடியாகும் இமையெல்லாம் இருளாகும் இன்பமே உன் வெள்ளம் ( பூவோடு உரசும் ) ( நினைவுகள் சுமக்க

வாழ்வோடு வாடலும் தேடலும்

நான் அழிந்துப் போய் நால்வரும் ஒன்றானால் யதார்த்தம் ஆனால் அதனை அடைவதற்கான தடைகள் ஏராளம் . அனுபவமே வாழ்க்கை ஆனால் அனுபவங்களை அன்றோடு விட்டுவிட்டு அடுத்த நாளை தேடும் மனது இவ்வாறிருக்க இருப்பவன் இல்லாதவனையும் இல்லாதவன் இருப்பவனையும் மாறி மாறி குறைக் கூறிக் கொண்டே கழியுது காலம் . இங்கே ஜாதி மத பேதங்கள் தலைவிரித்து வெறிப்பிடித்து ஆடுகின்றது . பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் எங்கே தொடங்கியது எங்கே முடிகின்றது என்ற வாழ்வின் போக்கு விளக்கமில்லாமல் விடிந்து முடிகின்றது . அதிலும் போட்டி எதிலும் போட்டி நானா நீயா அவனா இவனா ? எவனோ சொன்னான் என்று ஏற்றுக்கொள்ள முனைதல் முடியாத போது முரணாக முன்னெழல் இது தான் வாழ்வின் வடிகால் வழி வழிந்தோடுது பொறாமை அணையில்லாமல் கரை கடந்து சுயமாக சிந்திப்பதே இல்லை . ஆக்கவும் அழிக்கவும் அவனே முயன்றான் ஏதோ சக்தி என்று அவனே பரப்பினான் இதயத்தில் தான் தான் ராஜா தானே மந்திரி தன்னை விட்டால் தன்னை விட்டால் யாருமில்லை என்ற ஆணவம் ஆட்டி வைக்கும்

உள்ளம் உணர்வாகும் உணர்வில் உழைப்பே வாழும்

Image
உதிரத்தை வியர்வையாக்கி உடல் தன்னை வருத்தி தினம் உலகத்தில் உரமாக - நல் வரமாக வந்துதித்த மானுட கலங்களின் இறப்புக்களோ கதைகள் பல எடுத்துரைக்க வரலாற்றில் தடம் பதித்த சுவடுகள் சொற்பமல்ல ஆண்டாண்டு காலமாக நேர வரையறையின்றி மாண்டு மாண்டு மாடாய் தேய்ந்த மானுட போராட்டம் நாள் முழுதும் தன் உடல் வருத்தி தானே சாவதை தவிர்க்க; அக்கினியில் அழுத்தப்பட்ட கறைகளின் திரியாக தன்னோடே ஒட்டிக்கொண்டு படையாக தன் நிறம் மறைத்த வியர்வை தழும்புகளோடு களைப்பும் துடைத்தெறிந்து தூய காற்றோடு தூக்கத்தையும் ஏந்திக்கொள்ள 125 ஆண்டுகளுக்கு முன்பாக பொதுவுடமை எதிர்த்து வரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உழைப்பாளிகளின் ஒன்று திரளல் உரிமை கோரிக்கை போராட்டத்தின் முடிவுரை இன்றைய 8மணி நேரமாக சுருக்கப்பட்ட உழைப்பு நேரமும் வாரத்தில் ஒரு விடுமுறையும் ஓய்வுதினம் என்றாலும் கடமை உணர்ந்தவர்கள் கருதி முன்வந்து உலகத் தொழிலாளரின் ஒன்றுபட்ட உழைப்பை கௌரவிக்கும் திருநாள் வைகாசியின் முதல் நாள் வானத்தை தொட்டுவரும் வாலிபரின் கூக்குரல்கள் வாடாமல் தொடரும் எங்கள் முதியோரின் முழக்கங்கள் ஊரெங்கும் ஊர்வலங்கள் ஆம் இவை உரிமை ஊர்வலங்கள் கரடு முரட

என் உயிரின் உயிராக

நீ வேண்டும் எந்தனுக்கு என் உயிரின் உயிராக இன்பமுற நான் வாழ்ந்து மண்ணோடு மண்ணாக மெய் தீண்டும் மெய்யாக வைகறையில் உடனிருக்க உளத்தொடர்பு கொண்டிங்கு உறக்கத்திலும் உறவாட போலிதனை பிரித்தறிந்து புறந்தள்ளி புலனாக மாற்றங்கள் செய்து தினம் மடிதன்னில் எனைக் கிடைத்த விதி தன்னை வேறாக்கி மதியூடு புவியாள ( நீ வேண்டும்) விண்ணும் மண்ணும் நான் தொடினும் விரைந்தோடி எனைச் சேர வருத்தத்தில் நான் வாட வந்தென்னை அணைத்தெடுக்க அழும்போது துவலாமல் என் கண்ணில் நீர் துடைக்க தோற்றத்திலே துப்பறிய தூயவைகள் சேர்த்தறிய வீட்டினிலே விளக்கேற்ற விளக்கினிலே ஒளியாக ( நீ வேண்டும்) நீ வேண்டும் எந்தனுக்கு என் உயிரின் உயிராக இன்பமுற நான் வாழ்ந்து மண்ணோடு மண்ணாக!