என்னவனே, ஏனடா இத்தனை தவிப்பு உன்னால் மட்டும்? உனை ஒருமுறையாவது சந்தித்து விட துடிக்குது மனசு உனை ஒருமுறையாவது ஸ்பரிசித்துவிட ஏங்குது நெஞ்சம் உனக்காய் வாழ்வதில் தான் எத்தனை இன்பங்கள் உனக்குள் தொலைவதில்தான் எத்தனை கோடி களிப்பு ஏனோ, உலகமே எனக்குள் இருப்பதாய் ஒரு உணர்வு நீ என்னோடு இருப்பதால் நான் உனக்குள் தொலைந்ததால் வாழ்வதாயின் உன்னோடு மட்டுமே வாழ்ந்துவிட கேட்கின்றேன் மாள்வதாயினும் உனக்காய் மட்டுமே மாண்டுவிட கேட்கின்றேன் உனை சுவாசிப்பதனிலும் உனை அணுவணுவாய் ரசிப்பதனிலும் இன்பமுண்டோ எனக்கு? உனை ஆதிமுதல் அந்தம் வரை எனக்கே கேட்கின்றேன் என்னவனாய் மட்டும்! உனை சந்திக்க போகும் அந்த நாள்………………… எப்போது கிட்டுமென எனையே நொந்து கொள்கின்றேன் எனக்குள் நீ வாழ்கின்றாய் என் இறுதி வரை வாழ்ந்து கொண்டே இருப்பாய் என் மூச்சு நிற்கும் வரை உனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்றபோதும், உனை என்னருகிலேயே கேட்கின்றேன்! உன் சந்தோசத்தில் பங்கேற்பதற்கல்ல நீ இடிந்து போகும் நேரங்களில் உன் துணையாய் துணைவியாய் தாயாய் மாற…………!
சில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது. என்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட ...
Comments