எனக்கோரு இரங்கல் பா

ஜனனத்தின் முடிவது மரணமே கொள்வோம்
மரணத்தின் தொடக்கமோ புது ஜனனமே என்போம்
இடையில் இருப்பதே வாழ்வென்று காண்போம்
இருளையும் ஒளியையும் சேர்ந்திட ஏற்போம்

இறைவனின் படைப்பதில் இதனையும் பார்ப்போம்
இன்முகம் கொண்டவர் துயரினை துடைப்போம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் நீப்போம்
உறுதியுடம் நாம் ஓரினம் கோர்ப்போம்

கருவில் உயிர்பெற காரணம் கேட்டாய்
உருவில் உனைதர ஊதியம் கேட்டாய்
உலகில் உடன்வர உதவியும் கேட்டாய்
கடவுளின் கிருபையை யாரிடம் தீர்ப்பாய்

பூமிக்குள் நீ ஒரு விதையாய் வந்தாய்
புதிதாய் இங்கொரு பிறவியும் கண்டாய்
ஒட்டத்தின் முடிவதில் துயிலவே செய்தாய்
தூக்கத்தின் இறுதியில் துவண்டே வீழ்ந்தாய்

பிறப்பதோ இறப்பதோ பெரிதொன்றும் இல்லை
நிலைப்பினில் நாளொரு பயனதை சேர்ப்பாய்
கோபங்கள் சாபங்கள் கொன்று நீ வாழ்ந்தால்
மாண்டபின்னாலும் மனதினில் நிலைப்பாய்

தீயவர்  துணையதை ஏற்கவே மறுப்பாய்
தூயவர் துணை கொண்டு தாயகம் சேர்ப்பாய்
கலியுக கயவரை அடியுடன் வெறுப்பாய்
பார்ப்பவர் சீர்பட வாழ்வொன்றை வாழ்வாய்

மாண்டவர் மறுபடி எழுவதும் இல்லை
இருப்பவர் துணைவர சேர்ப்பதும் இல்லை
காட்சியில் மறைந்தவர் தூர நின்றாலும் 
சாட்சியாய் மனதினில் வாழ்வதே சிறப்பு

அகிலத்தில் எமை தந்த இறைவா நீ வாழ்க
இறைவனின் மறுவுரு தா(தந்தை)யே நீ வாழ்க
வழி தொட உறுதுணை உறவுகள் வாழ்க
என் மாமிசம் ஏந்திடும் மண்ணே நீ வாழ்க!

Comments

அருமை...

வாழ்த்துக்கள்...

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு