பிரிவுகளை தடுப்போம்

ஈன்றோர், உடன்பிறப்பு, உறவு, நட்பு, காதல்  என வரிசைப்படுத்தப்பட்ட நபர்களிடம் நெருக்கம், தெரிந்தவர், அயலவர் என பல்வேறு பாகுபாடுகளையும் உட்சேர்த்து நமக்கென ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டே உரையாடல்களை தொடர்கின்றோம் என்றாலும் அனேக நேரங்களில் இவர்களுள் ஏதோ ஒரு தரப்பினரால் கசப்பான சம்பவங்களையும் வலிகளையும் சந்தித்து உணரவே செய்கின்றோம். எதனால் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது என ஆராய்ந்தால் நாம் அல்லது சம்பந்தப்பட்ட நபர் எதிர்ப்பார்க்கும் சாதகமான பதில் அவர்களுக்கு கிடைக்காமையினால் அவர்கள் வரையறுத்த எல்லை தாண்டப்படுவதே காரணமாக அமைகின்றது அது ஒரு விடயம் குறித்ததாகவோ, பொருள் குறித்ததாகவோ இல்லை இன்னொரு நபர் குறித்ததாகவோ அமையலாம். 

ஒருவர் மீது கோபம் தலை தூக்கும்போது இணைந்திருக்கும் போது வெளி தெரியாத அவர் குறித்த தீய அம்சங்கள், குணாதிசயங்கள் பெரிதாக தெரிய ஆரம்பிக்கும் இதனால் வெறுப்பு மூலமாகி பிரிவே நிரந்தரமாகும் இவ்வாறான நிலைமைகளை சமாளிப்பதற்கு ஏதாவது வழிமுறைகளை கையாளப்பழகிக்கொள்ள வேண்டும் எல்லா சந்தர்ப்பங்களையும் தீமை பயக்கும் என தெளிவாக தெரிந்தும் அணுசரித்து செல்ல வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல

இன்று பிரிவு என்பது வாழ்க்கையில் ஒரு சகஜமான விஷயமாகவே ஆகிவிட்டது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் வேறு எதிர்ப்பாராத பிரச்சினைகளை உருவாக்கி வாழ்க்கையையே சிதைத்து விடும். அது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் இவை அனைத்திற்கும் அன்பொன்றே மருந்தாகும். இன்றைய வாழ்க்கை முறை தராதரம் என எல்லா விடயங்களையும் தீர்மானிப்பது பணமாகவே காணப்படுகின்றது என்ன தான் பணம் பாதாளம் வரை பாயும், பணமிருந்தால் எதனையும் சாதிக்கலாம் என வாய் கிழிய கத்தினாலும் உண்மையான அன்பையோ, பாசத்தையோ தரக்கூடிய உறவுகளை தர முடியாது வேண்டுமானால் தகாத உறவுகளை மட்டும் சேர்ப்பித்து தரும்

ஒரு மனிதன் தன் சுற்றத்து உறவுகளை பற்றி அறிந்துகொள்ள சரியான தருணம் அவன் வீழ்ந்திருக்கும் தருணமே அவனிடம் அனைத்துமே இருக்கும் போது ஆயிரம் உறவுகள் சுற்றி வட்டமிடும் அவனது நிலைமை சற்று தவறிவிட்டாலோ விரல்விட்டு எண்ணக்கூடிய தரப்பினரே இருப்பர் சிலருக்கு அவ்வளவும் இருப்பதில்லை எனவே மனிதன் சமனிலையை பேணும் வகையில் தன்னை தன் தனித்தன்மையை அமைத்துக்கொள்ள வேண்டும் இன்னொருவரின் சேர்ப்பில்/பிரிவில் தன் நிலை மாறுபடும் எனும் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் தனியாக தீர்மானங்களை மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்

எனவே கோபமோ, ஏமாற்றமோ, மனச்சோர்வோ எதுவானாலும் இன்னொருவரின் மேல் வெறுப்பைக் காட்டுவதற்கு பதிலாக தனியாக அமைதியாக யோசித்து அதற்கான காரணங்களையும் தீர்வையும் கண்டறிந்து அதன்பால் செயற்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் பிரிவுகளையும் தவிர்க்கலாம். தன்னை ஏமாற்றியவர், அவமானப்படுத்தியவர், துன்புறுத்தியவரை நானும் பதிலுக்கு பதில் பழி வாங்கியே தீருவேன் என நின்றால் இறுதியில் மிஞ்சப்போவது இழப்பைத்தவிர வேறெதுவும் இல்லை. அளவுடன் இருக்கும் வரை எந்தப்பிரச்சினையும் வர வாய்ப்பிருக்காது பிரிந்துப்போன உறவுகளை சேர்ப்பது என்பது உடைந்த கண்ணாடியை  ஒட்ட வைப்பதற்கு சமன் என்ன தான் ஒட்டினாலும் சகஜமாக ஆரம்ப காலகட்டங்களைப்போல் அத்தனை நெருக்கமாக இருக்காது எனவே ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவோமானால் எந்த துயரும் எம்மைத் தீண்ட முடியாது

Comments

/// அளவுடன் இருக்கும் வரை எந்தப்பிரச்சினையும் வர வாய்ப்பிருக்காது... /// உண்மை...

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு