55. பிடிக்கிறது!

நான் எத்தனையோ
வார்த்தைகள்பேசிய
பின்னும்
மௌனமாய்
இருக்கும்
உன் அமைதி
எனக்குப் பிடிக்கிறது!

உன்னோடே
மணிக்கணக்காய்
பேசிக்கொண்டிருந்தும்
பேசாததான
நினைவு
எனக்குப் பிடிக்கிறது!

உன் அருகில்
இருந்த போதும்
நீ காணாமல்
உனை நோக்கிய
பார்வை
எனக்குப் பிடிக்கிறது!

உனக்குள்ளே
வாழ்ந்து போதும்
உனை விட்டு
தூரமாக நீளும்
நாட்கள்
எனக்குப் பிடிக்கிறது!

எல்லாமே
இழந்த போதும்
உன் அன்போடு
உரைந்துப் போகும்
சுகம்
எனக்குப் பிடிக்கிறது!

மொத்தத்தில்
நீயே நானாகி போக
எனக்கு பிடிக்கிறது!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு