வானவில்










வர்ணங்களின்
கலவை
யோ
வையகத்தின் நிறமதோ
வந்தவுடன் மனம் துள்ளல் கொள்ளும்
வண்ண வண்ண வடிவதோ










மழையோடும்
வெயிலோ
டும்
உறவாடி உயிரானாய்
உன்னழகில் உறைந்துவிட்டேன்
உணர்வுகளை தொலைத்து விட்டேன்










என்ன
விலை அழகே நீ

சொல்லிவிடு வாங்கிடுவேன்
சொர்க்கத்தின் சுகத்தினையும்
உன் அருகில் அடைந்திடுவேன்











நீள்வட்டம்
அரைவட்டம்

இது தானே உன் வடிவம்
நில்லாமல் ஓடிடுறாய்
உன் என்னை பாராமலே











வாரத்தில்
மாதத்தில்

எப்போதோ நீ வருவாய்
உன் வரவை பார்ப்பதற்காய்
காத்திருக்கேன் தினம் நானும்











எனக்குள்ளே குதூகலிப்பேன்

எண்ணி எண்ணி தினம் மகிழ்வேன்
உன் அழகை கண்டு விட
என்னில் நான் கண் கொண்டேன்

Comments

வானவில் கவிதையைப் போலவே உங்கள் வலைப்பூவையும் மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்
Vijay said…
மழை கொண்டுவரும் வானவில் அழகோ இல்லையோ... உன் கவி சுமந்துவரும் வானவில் நிஜமாகவே அழகு
நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்
1ம், 3ம் படங்களும் உங்கள் கவிதையும் ஜோர்
Unknown said…
வலைப்பூ வடிவமைப்பு அழகாக உள்ளது.
கவிதை நன்றாக உள்ளது என்று மட்டும் தான் சொல்லுவேன்...
ஏனென்றால் எனக்கும் கவிதைகளுக்குமிடையில் வெகுதூரம்...
ஹி ஹி....
பகீ said…
உங்கட ரெம்ப்ளற்றை மாத்துங்கோ எண்டு சொல்லுவம் எண்டு இருந்தனான், அதுக்கு முதல் நீங்களே மாத்தீட்டீங்கள். இப்ப இலகுவாக வாசிக்க கூடியதா இருக்கு.
Admin said…
படங்களும், கவிதை வரிகளுக்கு அருமை தொடருங்கள்.
//வானவில் கவிதையைப் போலவே உங்கள் வலைப்பூவையும் மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்//

நன்றி
//மழை கொண்டுவரும் வானவில் அழகோ இல்லையோ... உன் கவி சுமந்துவரும் வானவில் நிஜமாகவே அழகு//

நன்றி

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு