தீபாவளி பிறந்த கதை

தீபாவளி என்றால் என்ன?


நரகாசுரன் என்ற அசுரனைக் கிருஷ்ணர் கொன்றதாகவும், அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்கவும், கொடுமைகள் ஒழிக்கப்பட்டதாக மக்கள் அத்தினத்தை தீபாவளி என கொண்டாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஸ்கந்த புராணத்தில் சக்தி கேதார விரதம் முடித்து சிவன் சக்தியை தன்னில் பாதியாக ஏற்று அர்த்த நாதீஸ்வரர் உருவமெடுத்த நாளையே தீபாவளி என கூறப்படுகின்றது
இப்படி தீபாவளியை கொண்டாடுவதற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் இறந்தவர்களை நினைவுகூறும் முகமாகவே அவர்களுக்கு பிடித்தமான உணவு, பலகாரங்கள், உடை என பல்வேறான பொருட்களையும் இறந்தவர்களின் படத்திற்கு முன்னால் வைத்து படைத்து தீபாராதணை காட்டப்பட்டு வழிபடுவதனையே இன்று தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டம்
எண்ணைக் குளியல், புத்தாடைகள் தரித்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடல். மேலும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் உறவாடல் திண்பண்டங்கள் பரிமாறல், பட்டாசு ஏற்றி மகிழ்தல், விளையாட்டு என்றவாறு களிப்போடு கழிகின்றது. இப்படியானதொரு நல்ல நாளிலே இடம் பெயர்ந்து துன்புறும் நம் சொந்தங்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொள்வோமாக!
அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Comments
வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.
மேலும்...
http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_1566.html
தீபாவளி வாழ்த்துக்கள்