Posts

Showing posts from October, 2009

பம்பலபிட்டியில் அரக்க வேட்டை

நேற்று முன் தினம் பம்பலபிட்டியில் கடலுக்குள் தள்ளி ஒருவரை துடிக்க துடிக்க அடித்து கொன்ற அரக்கத்தனம் மனதை பதைக்க வைக்கின்றது . ஆம் மனித நேயம் , மனசாட்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் இன்று மனிதர்களா ? அரக்கர்களா நம் தேசத்தில் வாழ்கின்றார்கள் என சிந்திக்கும் வகையில் மனித படுகொலைகளும் , சித்திர வதைகளும் பெருகிவிட்டது . மனிதம் மிருக வெறி கொண்டு மிருக வேட்டை கொள்கின்றது . உயிர் மறித்த மிருகங்களுக்கும் நாளுக்கு நாள் மாறும் விலையுள்ள இந்த தேசத்தில் மனித உயிர்களுக்கு விலை இல்லை என கொன்று குவிக்கப்படுகின்றது உயிரின் பெறுமதி தெரியாமல் . 29/10/2009 அன்று பம்பலபிட்டியில் வாகன நெரிசலுக்குள் வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும், ஆட்களின் மீது கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறி அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் அவரின் உயிரையே பறித்த அசம்பாவிதம் ஏற்றுக் கொள்ள முடியாதது . இங்கே சடப்பொருட்களுக்குள்ள முக்கியத்துவம் மனித உயிர்களுக்கு இல்லையே என்பது வேதனையை தருகின்றது . கொலை செய்யப்பட்ட அக்குறித்த நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என

உன்னத காதல்

நீ இருக்கும் நெஞ்சமிது - உன் நினைவுகளை மெல்லுது கனவுகளை கொள்ளுது நிஜத்தினை அள்ளுது ! யார் யாரோ வந்தபோதும் தேடுது உன்னையே - உன் மௌனத்தின் கொடுமையால் நொந்தது இதயமே ! பேசாமல் ஏசுகிறாய் ஏசிவிட்டு பேசுகிறாய் என்னவென்று ஏற்றுக் கொள்வேன் ! கூடலில் களிப்பின் உச்சத்தையும் ஊடலில் நரகத்தின் வாசலையும் தொட வைக்கின்றாய் ! பாசமா ....? வேஷமா ....? பலமுறை கேட்டு விட்டேன் உன்னதை விட உயர்ச்சி என் காதல் என்கின்றாய் ! ஏற்றுக் கொள்கின்றேன் அன்பை பெருக்கி - உன் உரிமையை - நீ எடுத்துக் கொள்கின்றாய் ! உன் உணர்வை ஏற்றுக் கொள்கின்றேன் வா உல்லாச வானில் - நம் உன்னத காதலை சுவாசிப்போம் !

தேவதை வந்தால்(ள்)

Image
இனியதொரு மாலைப்பொழுது சோலைகள் நிறைந்த பிரபஞ்சம் சில்லிடும் வாடை காற்றை சுவாசித்தும் உடல் மீதான அதன் வருடலை வாங்கிக் கொண்டும் களைந்த தலை கோதி உடலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு காலாற நடை பயின்றேன் . மௌனத்தின் அர்த்தத்தை அசைப்போட்டுக் கொண்டே முன் நோக்கிச் செல்ல மூ ச்சு முட்டியது முடியாமல் எட்டியது . இயற்கை எத்தனை பிரமிப்புக்கள் சுமந்தது . ஆச்சரியம் அடங்கவில்லை . ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொன்றும் புதிதாக .... இந்த தேசத்தின் பெயர் தான் என்ன ? எங்கிருந்து வந்தது புதிதாய் என எனக்குள்ளேயே கேள்விகள் என்னையே குடைந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் மெய் சிலிர்க்க வைத்தது அழகிய பிரபஞ்சம் .... எங்கிருக்கின்றோம் எங்கு செல்கின்றோம் என்பதை உணராமலேயே உலா சென்றேன் . நீண்ட தூரம் நிலவின் வழி காட்டலோடே மனதின் அமைதியை சூடிக்க்கொண்டே முன்னகர்ந்தேன் .... வழியே திடீரென கண்ணை பறிப்பதான் ஒரு ஒளி பிளம்பு ஜொலித்தது அதற்குள்ளிருந்து பிரபஞ்சத்தின் மொத்த அழகையும் அள்ளிப் பருகிய அழகின் உருவாக ஆம் ஒரு தேவதை அவள் ஒரு தேவதை . கதைகளில

உணர்வுள்ள தமிழன்

வீரம் பேசி நிற்போம் பிறர் வீழ வழி சொல்ல மாட்டோம் தீய எண்ணங்கள் புதைப்போம் தீர்க்கமாய் மார்க்கம் காப்போம் ஏழை என்றெண்ண மாட்டோம் அவர் யாவரும் எம் சொந்தம் என்போம் சாதி மதம் பார்க்க மாட்டோம் ஓரினம் ஓர் மக்கள் ஆவோம் உம் உதிரத்தை உணவாக்க மாட்டோம் - உண்மை உடலுக்குள் உயிராக இருப்போம் சுரண்டலில் சுகம் காண மாட்டோம் உழைத்தே உயர்ந்து நிற்போம் தமிழையும் தாயையும் காப்போம் காத்திட கரம் கோர்த்து நிற்போம் எறும்பின் குணத்தோடே வருவோம் யானையின் பலம் தாங்கி நிற்போம் நாங்கள் தமிழே உயிரென்று வாழ்வோம்

அன்பே என் அன்பே

Image
என் சுவாச நரம்புகளை - உன் இசை கொண்டு மீட்டு கிறாய் இளம் நெஞ்சி ன் துடிப்புகளை ஸ்பரிசித்து உயிர் தந்தாய் ! இதயத்தின் அறைகளிலே உன் காத லை நிரப்புகிறாய் இனியவள் கரங்களிலே என் இதயத்தை சுழற்றுகி றாள் ! அந்த நாள் நினைவுகள் அகத்தினில் அடியிலே இந்த நாள் இன்பங்கள் இன்னுமே முடியலே ! என்னவோ என்னவோ எனக்குள்ளே என்னவோ என்னவள் தாங்கிய இனிமை தான் அன்பிலே ! உண்மையாய் உறவுகள் உணர்விலே மனதிலே மென்மை யாய் அணைப் புக ள் நெஞ்சிலே விளகலே ! கனவுகள் கவிதைகள் நினைவிலே நிலவி லே நினைவுகள் தாங்கிய நிஜங்களே அன்பிலே ! என் விழியின் இடைவெளியில் உன் பார்வையால் நோக்குறா ய் உடலின் அணுக்களிலே காற்றலையாய் நுழைகின்றாய் ! வார்த்தை ஒலிகளிலே பெண் கருவாகி உயிரானாய் கவலையின் வலியினிலே நல் மருந்தாகி மலரானாய் - பெண் நீயே என் உயிரானாய் !

இன்றைய போக்கு

Image
தாயை இழந்து எந்தையை இழந்து தாரத்தையும் சேயையும் சேர்த்திழந்து - தவிக்கும் தன்னையும் தன் இனத்தின் நிலையையும் கண்டு சினங் கொண்ட இளைஞன் உன்னிடம் நல்லது கேட்கவில்லை நாசம் செய்யாதிரு “ நாய் நாடே ” என்றான் உரக்க இவன் குரல் கேட்ட நாய்கள் குரைக்கத் தொடங்கின கொடூரமாக .... அவற்றுள் ஒரு நாய் பேசவும் செய்தது தாய் ஸ்தானத்தை எமக்களித்ததையிட்டு மகிழ்வுற முடியவில்லை உன் மனித இனத்தின் அழுக்கு எண்ணங்கள் இந்நாட்டை குப்பைகளாக சூழ்ந்துள்ளதனால் !

யார் இந்த பதிவர்???

Image
அவரவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், விஷேட தன்மைகள் காணப்படும் . ஒரு குறித்த நபருடைய போக்கு ஏனையவர்களுடையதோடு எத்தனை வீதம் பொருந்துமென கணக்கிட்டு பார்த்தால் மிகக் குறைந்தளவாகவே காணப்படும். என்னடா தலைப்புக்கும் கருத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே என யோசிக்கின்றீர்களா? தொடர்பு இருக்கு...... கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சக வலைப்பதிவர் ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது அவரோடு கலந்துரையாடியதில் அவரை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர் சார்ந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். அத்தோடு உங்களுக்கும் ஒரு வேலை இருக்குங்க. யார் இந்த பதிவர்னு சரியாக கண்டு பிடித்துவிடுவீர்களானால் உங்களை இந்த பதிவர் ஸ்பெஷலோட விருந்தாளியாக அறிமுகப்படுத்துவோம். எப்போதும் சிரித்துக் கொண்டும் ஏனையவர்களை சிரிக்க வைத்துக் கொண்டும் இருக்கும் இவரை பற்றி நீங்களும் கண்டிப்பா தெரிந்து கொள்ளனும் . இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவர் ஒரு சிறந்த வலைப்பதிவர். அனேகமான பதிவுகள் இட்டுள்ளார். என்னவோ தெரியவில்லை நடிகைகளுக்கும் இவருக்கும