39. புதுதாய் ஒரு ஜனனம்



என் கண்களில் பட்டும் படாமல்
இத்தனை காலங்கள்
எங்கிருந்தாய் நீ?

உன் வருகை ஓர்
உயிருள்ள உடலாய்
உருமாற்றுகிறது என்னை
என்றபோதும்
என் கடந்து போன நாட்கள்
உனைக் காணாமல்
விரயமாகிவிட்டதை எண்ணி
இதயம் இடிந்தே
விழுகின்றது
இத்தருணம்!

உன் கருணை - என்
இத்தனை கால கனவை
பிரதிபலித்தல்லோ விட்டது - ஆம்
நானும் வெற்றிவாகை
சூடிவிட்டேன்
எனக்குள்ளான
உன் வரவால்
உன் உதயத்தால்!


Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு