என்னவனே, ஏனடா இத்தனை தவிப்பு உன்னால் மட்டும்? உனை ஒருமுறையாவது சந்தித்து விட துடிக்குது மனசு உனை ஒருமுறையாவது ஸ்பரிசித்துவிட ஏங்குது நெஞ்சம் உனக்காய் வாழ்வதில் தான் எத்தனை இன்பங்கள் உனக்குள் தொலைவதில்தான் எத்தனை கோடி களிப்பு ஏனோ, உலகமே எனக்குள் இருப்பதாய் ஒரு உணர்வு நீ என்னோடு இருப்பதால் நான் உனக்குள் தொலைந்ததால் வாழ்வதாயின் உன்னோடு மட்டுமே வாழ்ந்துவிட கேட்கின்றேன் மாள்வதாயினும் உனக்காய் மட்டுமே மாண்டுவிட கேட்கின்றேன் உனை சுவாசிப்பதனிலும் உனை அணுவணுவாய் ரசிப்பதனிலும் இன்பமுண்டோ எனக்கு? உனை ஆதிமுதல் அந்தம் வரை எனக்கே கேட்கின்றேன் என்னவனாய் மட்டும்! உனை சந்திக்க போகும் அந்த நாள்………………… எப்போது கிட்டுமென எனையே நொந்து கொள்கின்றேன் எனக்குள் நீ வாழ்கின்றாய் என் இறுதி வரை வாழ்ந்து கொண்டே இருப்பாய் என் மூச்சு நிற்கும் வரை உனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்றபோதும், உனை என்னருகிலேயே கேட்கின்றேன்! உன் சந்தோசத்தில் பங்கேற்பதற்கல்ல நீ இடிந்து போகும் நேரங்களில் உன் துணையாய் துணைவியாய் தாயாய் மாற…………!
உருவம் கொடுப்பதற்காக கற்களையும் சிற்பியையும் படைத்தான் இறைவன்! அவனே சிற்பியாய் நின்று உருவத்தோடு உயிரையும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பம் நீ அவன் செதுக்கல்களில் தான் எத்தனை நேர்த்தி எத்தனை நுணுக்கமான வளைவுகள்..... அப்பப்பா... அற்புதம் கண்டு வியக்கின்றேன்! அங்கங்கே ஒவ்வொன்றாய் கண், காது, மூக்கு, வாய் என ஒன்றோடு ஒன்றாய் ஒவ்வொன்றாய் எத்தனை செதுக்கல்கள்… இவற்றுக்குப் பெயர் தான் உறுப்புக்களாம் உதிரம் கொண்டல்லோ செய்துள்ளான் ஒவ்வொன்றையும்! சிற்பங்கள் சிறப்பானவை போற்றத்தக்கவை பள்ளிக்காலம் தொட்டு இன்று வரை சிற்பங்களையும் அவற்றின் கலை அம்சங்களையும் கண்டு வியந்த நெஞ்சம், இன்று......, உனை நோக்கி பயணிக்கின்றன என் அதிசய பார்வைக்கூடே அதிசயமாய்! உன்னிலும் உயர்ந்த சிற்பம் உண்டோ உலகில் உயர்வைப் பெற..... உயர்வைத் தர.....? உன்னதம் தாங்கிய உன் வம்சம் படைப்பதற்காய் எத்தனை சிற்பிகளை படைத்திருக்கின்றான் தாய் என்னும் சிறந்த ஸ்தானத்தோடு? உதிரத்தை பாலாக்கி - உன்னை உயிராய் ஆளாக்க தன்னை பாழாக்கி - தரணியிலே தவமிருந்...
Comments