22. சொல்ல முடியாத சோகம்

கருவறையின் பிறப்பிடமாய்
கரு நீல காரிருலாய்
கனத்ததொரு மனதினொடு
கன்னிகையால் காத்திருந்தால்
சொப்பனங்கள் அற்பமென
சொன்னதொரு காலமிது
தித்திக்கும் தினங்களிலே
திவட்டாத இன்ப துளிகள்
(அன்பு துளிகள்)
எப்படியோ இருந்த மாது
இப்படியேன் ஆக்கப்பட்டாள்?
சோதனையும், வேதனையும்
சொல்லாமல் வருவனதான்
ஆனால்,
சொட்டும் இடைவெளியின்றி
சொந்தமானால் என் செய்வாள்?

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு