31. தூக்கத்தின் துக்கம்

என் கனவுகளுக்கு
கைகள் இல்லைதான்
ஆனால் சிறகடித்தல்லோ
பறக்கின்றன

ஆம் கனவுகளில் மட்டுமே
தூங்கிப்போண
என் உணர்வுகள்
துயிலெழுகின்றன

கனவே உன்னால் தான்
நான் கவி வடிக்கின்றேன்
அதற்கு காரணமும்
என்னவனை தாங்கி
நீ வருவதே

என் கனவு
கானலானதோ யானறியேன்
நான் தவறாய் செல்கின்றேனோ
அதுகூட யானறியேன்
இன்றென்னவோ
நானறிந்ததெல்லாம்
என்னவனே உன்னைதான்
உனை மட்டும்
கட்டிக்கொண்டுதான்
என் கனவுகள்

என் இந்த இன்ப கனவுகள்
தூங்கும் போது வருவனவல்ல
நான் விழித்திருக்கும்
போது தான்
அதிகம் வருகின்றன

சிலவேளை
இவையும் எனக்குள்ளேயே
தூங்கிப்போய் விடுமோ?
துடிக்குது மனசு
உனக்காக மட்டும் தான்
துயில வைத்துவிட மாட்டாயே?

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு