21. தருணம்

உன்னால் மீண்டும் மீண்டும்
ரணமாக்கப்பட்டதனால்
உன் மீதான அதே,
பழைய அன்பு இல்லை,
பரிவு இல்லை,
பாசம் இல்லை,
மனதால் பார்ப்பதற்கு
கூட முடியாமலில்லை
விரும்பவில்லை!
என் உறவு
ஏதோ தொடுவான நினைவோ?
என் ஏக்கங்கள் புரியவில்லை
ஏமாற்றங்களின் வலி அறியவில்லை
தனிமையின் தாகம் தெரியவில்லை
பின் ஏன்,
நான் உனக்கு.....?
நீ எனக்கு.....?
நாம் நமக்கு.....?
நான் நம் வழியில் புறப்படலாமே!
என் பாதையை நோக்கி
என் பயணங்கள்
பயணிக்க தொடங்கிய வண்ணம்
உன் விடைபெறல்
முடியாமல்......
முற்றுப்புள்ளி.....?
இது தொடர் கதை அல்ல
சுபமான முற்றுகை!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு