30. விடிவில்லாத விடியல்

எதிர்ப்பார்ப்புக்கள்
எட்டிப்பார்க்கும் போது
அங்கே ஏமாற்றங்கள்
இரட்டிப்பாகின்றன!

சுவாசத்தின் சூடு கூட
எரிமலையாய்
எரிக்கின்றது!

தாகத்தின் தேடலுக்குள்
வரட்சியே வாழுகின்றது!

எப்படியோ.....,
எப்போதோ.......,
இருண்டுபோன
எந்தனுக்குள்
சோர்வமர்வு மீண்டும்
சூடிக்கொள்கின்றது!

ஓ.....
சிங்கத்தின் குகைக்குள்
அடைப்பட்ட முயலாய்
அன்றுமட்டுமல்ல
இன்றும்
பெண்களின் வாழ்க்கை
இனியாவது…………?

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு